அவளை சமாதனப் படுத்தும் வகையில் .
"இதோ இந்த கொழந்த என்ன பாவம் பண்ணான்மா இவனை பிச்சை எடுக்க விட்டிருக்க? எனக்கு அறியாத வயசு நீ எடுத்து எங்களை வளர்த்த மாதிரி வளர்க்க முடியாதா? இதோ இப்போ படிச்சு வேலைக்கு போயிருக்கேன் எப்படியோ அவனை வளர்த்துக்க மாட்டேனா?"
"அம்மா என்னம்மா எதுக்கும்மா பாட்டிகிட்ட கோவப் படற? எல்லாம் நல்லதுதானே நடந்திருக்கு, எனக்கு என்ன குறைவு இப்போ விடும்மா ப்ளீஸ், உன் கண்ணுல இனி கண்ணீரை பார்க்க கூடாது புரிஞ்சுதா கண்ணை துடைச்சுக்கோ. நாளைக்கு அப்பா வந்து கேட்டா, ஏண்டா என் பொண்டாட்டிய சரியா கவனிச்சுக்கலேன்னு, நான் என்ன சொல்வேன்? " என்றான், அவள் சிரித்து விட்டாள், " ஆமாம் நாளைக்கே உங்க அப்பா வந்துடப் போறாரு போடா!" என்று வெக்கத்தோடு அவள் கூறுகையில்,
"ஐயோ எங்க அம்மாக்கு வெக்கத்தை பாரு பாட்டி" என்று அங்கிருந்த நிலைமையை மாற்றினான், அஜய்.
அதைக் கேட்ட எல்லோரும் சிரித்தனர்... வீடே கலகலன்னு இருந்தது. அஜய் வந்தவுடன் , எல்லோரும் சாப்பிட்டனர், உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தனத்தின் அப்பா ஒன்றுமே பேசவேயில்லை .
"என்னப்பா நீங்க ஒண்ணுமே பேசல?" என்று தனம் அவள் அப்பாவிடம் கேட்டாள்.
"பேசறதுக்கு என்னம்மா இருக்கு ? ஒன்ன பார்த்தா பெரிய இடத்து பெண்ணு மாதிரி இருக்கு? நீ பெரிய படிப்பு படிச்சு பெரிய வேலைல இருக்க போலிருக்கு,நம்ம வீட்டு பொண்ணுகளுக்கு இன்னும் கல்யாணமாகல, இந்த ரெண்டுக்கும் சரியான படிப்பு கிடையாது, வர வரன்னெல்லாம் இவ்வளவு செய் அவ்வளவு செய்யுன்றாங்க, என்ன செய்ய ஒன்னும் புரியாமத்தான் இருக்கோம். " என்றார்.
"என்ன தாத்தா, நாங்க இருக்கப்போ அப்படிலாம் விட்டுடுவோமா?"
'ஹ்ம்ம் அது கூட நீதான் சொல்ற ஆனா உங்கம்மா வாயே தொறக்கல பாரு?"
"என்னப்பா, நா பேசினா என்ன, அவன் பேசினா என்ன? சொல்லுங்க , எது செய்யணுமோ அதை செய்யறேன், ஒன்னு செய்யுங்க எல்லோரும் சென்னையில வந்து தங்கிடுங்க , எனக்கு ஒரு பிளாட் இருக்கு அங்கேயே தங்கிடுங்க, நல்ல வரன் பார்த்து இவங்களுக்கு கல்யாணம் பண்ணிடலாம். "
அவர் தன் மனைவி லக்ஷ்மியை தலை நிமிர்ந்து பார்த்தார் "என்ன சொல்ற நீ?"
என்று அவளை வினவ..
"நீங்க முடிவெடுங்க, இந்த வீடு நிலமெல்லாம் என்ன பண்ணுவோம் நாம சென்னைக்கு