This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
அம்மாவுக்கு எப்படிப் புரியப்போகிறது என நினைத்தவளாய் சாதாரண அணிகலன்களைப் போட்டுக் கொண்டாள். அப்பாவோ, “எங்களை ஏமாற்றலாம்னு நினைக்காத! எண்களுக்கு எல்லா இடத்திலும் கண்கள் இருக்கு! தப்பு நீ செஞ்சா தண்டனை அவனுக்கும் சேர்த்துத் தான் கிடைக்கும் !படிக்கிற வேலையை மட்டும் பாரு! என்று அவளிடம் எச்சரித்து அனுப்பினார்.
மிகுந்த மனச்சோர்வுடன், களைப்புடன் வந்த ரம்யாவைப் பார்த்து அதிர்ந்த கண்மணியிடம், இரவு நடந்த விஷயங்களை ரம்யா விவரமாக கண்மணியிடம் கூறினாள். ரம்யாவின் காதல் அவள் பெற்றோருக்குத் தெரிந்து அவளைக் கண்டித்த தகவலை தினேஷிடம் கார்த்திக் மூலமாகத் தெரிவிக்குமாறு சொன்னாள். எல்லாத்தையும் ஆறப்போடு ரம்யா. என்னிக்காவது ஒரு நாள் அவங்களுக்குத் தெரிஞ்சுதானே ஆகணும், ஒன்னும் வருத்தப்படாத எல்லாமே நாளடைவில் சரியாகிடும் என்றாள் கண்மணி. ரம்யா ,தினேஷ் இருவரும் ரம்யாவின் அப்பா சொன்னது போல கல்லூரியில் அவர்களைக் கண்காணிக்க யாரவது உளவாளிகள் இருப்பார்களோ என்று கவலைப்பட்டனர். கல்லூரி வளாகத்துக்குள் எதிரெதிரே அவர்கள் நடந்தாலும் ஒருபோதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு விநாடி நேர கண்களின் பார்வைப் பரிமாற்றம் மட்டுமே, மறுவினாடியே டக்கென தலைகுனிந்து தரையைப் பார்த்தவாறே நகர்ந்து விடுவாள். தினேஷுக்கு வருத்தமாக இருந்தது. காதலில் எவ்வளவு மகிழ்ச்சி வருகிறதோ அத்தனை வேதனையும் வந்துவிடுகிறது என்றே அவனும் சோகமாக இருந்தான். எப்போதும் போல இருவருக்கிடையே தொலைபேசி அழைப்புகள் இல்லை. வகுப்பறையில் மதிய நேர சந்திப்புகள் இல்லை. தினேஷின் தாயின் இழப்புக்குப் பின் உன் அம்மாவாக இருப்பேனென அவனிடம் சொல்லி, அதைப் போலவே அவனைக் கவனித்துக் கொள்ள ஆரம்பித்தவள், இப்போது தன்னையே சிறிதும் கவனிக்காமல் ரம்யா மெலிந்து கொண்டே போனாள், கண்ணைச் சுற்றிக் கருவளையங்கள் படர்ந்து வர, அவள் பல நாட்களாய் சரியாகத் தூங்கவில்லை என்று காட்டின.
மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த அறிவிப்பு வந்தது. ஆனால், இதுவரை நடைபெற்ற செமெஸ்டர் தேர்வுகளில் எழுபது சதவீத மதிப்பெண்களுக்கும் மேலே பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் கட்டுப்பாடு விதிக்கவும், வகுப்பில் சில மாணவிகள் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர். ரம்யாவும் அந்த மாணவிகளில் ஒருவள் என்பதால், அப்பாவும் அவளுடன் துணைக்கு வர, வளாகத் தேர்வில் பங்கு பெற்றாள். முதலில் புதிர்கள் கொண்ட எழுத்துத் தேர்வு, அதில் தேர்வாகி, நேர்முகத் தேர்வுக்கும் தகுதி பெற்றாள். அதில் கேள்வி கேட்டவர், அவளின் மதிப்பெண்களையும், கையெழுத்தையும் பாராட்டினர். அவர் மூன்று கேள்விகள்
This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.