"ஒய் நாட், நீ சொன்னா படிக்க மாட்டேனா என்ன?"
"சுயூர்! கண்டிப்பா உன் கிட்ட கொடுக்கறேன் படி, நீ ஓகே பன்னவுடனே ப்ரொபசர் கிட்ட கொடுக்கறேன்."
"நீ இன்னும் காலேஜுக்கு போகல ஆனா ப்ரோபாசார்கிட்டேன்ற?"
"அது இப்ப ரெடி பண்ணிடுவேன் அப்புறம் காலேஜ் ப்ரோபாசர் கிட்ட கொடுப்பேன் அவர் அப்ரூவ் பன்னவுடனே பப்லிஷிங்க்கு கொடுத்துடுவோம். "
"ஐ அம் ரியல்லி ப்ரவுட் ஆப் யு அஜய் !"
"தேங்க்ஸ் மா!"
"சரி போ கண்டின்யு யுவர் ஒர்க்! "
ஓகே மா குட் நைட் !"
"குட் நைட் அஜய்!" இருவரும் தங்கள் ரூமுக்கு சென்றார்கள். தனத்திற்கு தூக்கமே வரவில்லை, ஒரு வேளை ஆதூ வந்துட்டா நிலைமை என்ன ஆகும் என்று நினைத்துக் கொண்டாள், அவன் வரவேண்டும் அவனை பார்க்க வேண்டும் என்று மனம் வேண்டினாலும், வேதனைப் பட்டாலும், அவன் வரவேண்டாமென்று ஒரு பக்கம் தோன்றியது .
மறுபடியும் ஒரு அவமானத்தை சந்திக்க அவள் தயாராக இல்லை அதுவும் தன் மகன் எதிரில்... வேண்டாம் ஆதூ வந்துடாத ப்ளீஸ் வந்துடாத என்று பலவிதமாக எண்ணி தன்னை தானே நொந்துக் கொண்டிருந்தாள். அன்று இரவு முழுவதும் அவளுக்கு தூக்கமில்லாமல் போனது, அதிகாலை நாலரை மணிக்குத்தான் தூங்கினாள்.
எட்டுமணியாகியும் தன் அம்மா இன்னும் எழுந்திருக்காததை கேள்விப்பட்டு அவள் ரூமுக்கு சென்றான் அஜய். அவள் இன்னும் தூங்கி கொண்டிருந்தாள். அவள் அருகில் சென்று " அம்மா.... அம்மா உடம்பு சரியில்லியாமா? என்னாச்சு ஏன் இன்னும் எழுந்திருக்கல?" தனம் கண்ணை கசக்கிக் கொண்டு சுத்தி பார்த்தாள், "டைம் என்னாச்சு ரொம்ப நேரமாச்சா?"
"ஒன்னும் உடம்பில்லையே? ஏதாவது உடம்புன்னா சொல்லு டாக்டர்கிட்ட போலாம், இல்லேன்னா நீ தூங்கும்மா." என்று அஜய் கூறவும்,
"இல்ல அஜய், எனக்கு உடம்பெல்லாம் நல்லாயிருக்கு, கொஞ்சம் அசதில தூங்கிட்டேன்," என்று எழுந்தாள் .
"இல்லம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு!"
"இல்ல அஜய் வேலை இருக்கு, இரு ப்ரஷ் பண்ணிட்டு வரேன்." என்று பாத்ரூமுக்கு ஓடினாள்.
அஜய்க்கு வருத்தமாகயிருந்தது , என்ன ஆச்சு அம்மாவுக்கு எப்பவுமே விடி காலையில்