தங்கை" என்று குமரன் கூறினான்
"உங்க டீம் மேனேஜர் சந்திரனா?" என்று தனம் கேட்கவும்,
"அது எப்படி மேடம் உங்களுக்கு தெரியும்?" அவர்களுக்கு ஆச்சர்யம், தனம் தன் கம்பெனி பேரை கூறி அதில் தான் டீம் லீடராக இருப்பதாகவும், அவளுடன் வேலை பார்த்த சந்திரன்தான் அவர் என்றும், "சின்ன கம்பெனியில் மானேஜராக பதவி கிடைத்ததும் அங்கு போய் விட்டார், ரொம்ப நல்லவர்," என்று தனம் கூறியதை கேட்டதும், அவர்களுக்கு, அவள் மீது இன்னும் மதிப்பு கூடியது.
"அப்படியா மேடம், உங்க கம்பெனி பெரிய கம்பெனியாச்சே மேடம்! "
"ஆமாம் !" என்றாள்.
"நீங்கலெல்லாம் ரொம்ப நல்லவங்களாக இருக்கீங்க, என் தங்கைங்க ரொம்ப படிக்கல, ஆனா வீட்டு வேலையெல்லாம் நல்லா செய்வாங்க."
"தெரியும்மா, நிக்கத் அக்கா எல்லாம் சொன்னாங்க."
"நீங்க படிச்சிருக்கீங்க ஏன் அவங்க படிக்கல உங்கள மாதிரி?" என்று செல்வி கேட்கவும் ,
"எங்க ஊர்ல காலேஜ் இல்லீங்க, நான் வெளியூருக்கு போய் படிச்சேன். படிக்கச்சேயே வேலை செய்ஞ்சு படிச்சேன். அவங்களுக்கு அவ்வளவு தைரியம் இல்ல. அதான், அவங்க அம்மா அப்பாவை விட்டு வர பிரியப்படல அவ்வளவுதான். "
"அது சரி நீ ஏன் கல்யாணம் பண்ணிக்கல ?"
அவள் நிக்கத்தை நிமிர்ந்து பார்த்தாள், உடனே நல்லதுக்கு பொய் சொன்னால் பாவமில்லை என்று நினைத்து, "இல்ல ஆண்ட்டி எனக்கு கல்யாணம் ஆயிடுத்து, அவர் வெளிநாட்டுக்கு போயிருக்காங்க. என்ன அங்க வர சொன்னாங்க, நான்தான் போகல? அவர் இன்னும் கொஞ்ச வருஷத்துல வந்துடறேன்னு சொல்லியிருக்கார்." என்று பொய் என்று தெரிந்தும், கூறினாள்.
நிக்கத், கண்ணம்மாவை பார்த்து கண் ஜாடை காண்பித்தார். அவரும் புரிந்துக் கொண்டார், அவள் பொய் சொல்கிறாளா என்று நினைத்துக் கொண்டனர் கண்ணம்மா வீட்டுக்காரர்கள், ஆனால் நிக்கத்தோ பாவம் ஏன் இவள் பொய் சொல்லவேண்டும், என்று நினைத்துக் கொண்டார்.
சரி எல்லாரும் சாப்பிடலாம் வாங்க! " என்று செல்வி கூப்பிடவும்,
"நான் சாப்பிட்டுத்தான் கிளம்பினேன் என்று தனம் கூறினாள்.
"ஐயோ நானும் தான் சாப்பிட்டு விட்டுத்தான் கிளம்பினேன், " என்று நிக்கத் கூறவும் " சரி அப்போ இந்த ஸ்வீட்டும், மில்க் க்ஷேக்கும் சாப்பிடுங்க. " என்று கொண்டு வந்து கொடுத்தார்கள்.