அவள் கண் விழித்த விநாடியில் ஆவலோடு அவளை நெருங்கியவர்கள் “பொசுக்”கென்று முகம் சுண்டிப் போனார்கள்.
தொடர்ந்து பல முறை அதே போல் அவள் கண் விழித்துக் கண் விழித்து மயங்க
குழப்பத்திலாழ்ந்தனர் அனைவரும்.
“ஏ.சி.தீனதயாள் “ஆஹா...இவ சரி ஆனா எல்லா மர்ம முடிச்சுக்களுக்கும் சுலபமா விடை கிடைக்கும்னு பார்த்தா...இவ நிலைமை ரொம்பவே பரிதாபமாயிருக்கே?” சாம்பசிவத்திடம் புலம்பினார்.
“ஏ.சி.சார்..நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?” தயக்கமாய்க் கேட்டார் சாம்பசிவம்
குறுஞ்சிரிப்பு சிரித்த ஏ.சி. “ம்...சொல்லுங்க...இப்ப நான் யார் மீதும் கோவப்படற மன நிலைல இல்லை!” என்றார்.
“வந்து...எனக்குத் தெரிஞ்சு...கேரளாவுல ஒரு நம்பூதிரி இருக்கார்...அவரு பேரு “குள்ளச் சேட்டன்”..அவரு வந்தா...நம்ம காம்ப்ளக்ஸ்ல இருக்கற பிரச்சினையைக் கண்டு பிடிச்சிடுவார்!...உண்மையைச் சொன்னா எனக்கே இப்ப இதெல்லாம் பேயோட வேலைதானோ?ன்னு சந்தேகமாயிருக்கு!”
தாடைப் பகுதியை “வரட்..வரட்”டென்று சொறிந்தபடி யோசித்த ஏ.சி.தீனதயாள் “ஓ.கே!...நீங்க காம்ப்ளக்ஸ் ஓனர்...உங்களுக்கு அதுல நம்பிக்கை இருந்தா நீங்க தாராளமாய்ச் செய்யலாம்!” என்றார்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்...நாளைக்கே நான் கேரளா கிளம்பிப் போறேன்!”
இன் த மீன் டைம்..இந்தப் பொண்ணு ராதிகா கண் விழித்து அந்தக் காமிராவில் பதிவான காட்சிகளை எங்களுக்கு காண்பிச்சா....நாங்க அதை வெச்சிட்டு எங்க மூவைத் தொடர்வோம்...ஓ.கே?!”
“நல்லதுதானே சார்?...நீங்க அறிவியல் பூர்வமா அமானுஷ்யத்தைக் கண்டுபிடிங்க!...நான் மாந்திரீக முறைல அதே அமானுஷ்யத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யறேன்!...தேவைப்படும் இடங்களில் ரெண்டு பேரும் சேர்ந்தே செயல்படுவோம்!” சாம்பசிவம் ஒருவித சந்தோஷக் குறுகுறுப்பில் பேசினார்.
“ஓ.கே.மிஸ்டர் சாம்பசிவம்..கடைசில ரிசல்ட் நல்லபடியா வந்தாச் சரி!” என்றார் ஏ.சி.
*****
மறுநாள் ஓரளவிற்குத் தெளிவாகி இருந்த ராதிகாவிடம் மெல்லப் பேச்சைத் துவக்கினார் ஏ.சி.
அவளுக்கு அந்த ஞாபகங்கள் வரும் போதெல்லாம் முகம் இருண்டது. உடல் நடுக்கத்தில்