கூட உங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது என்கிற ஒரு பிடிவாத மனசு அப்போது எனக்கு இருந்ததினால...அதையும் சொல்லாம விட்டுட்டேன்!”
அப்போது நிவேதிதாவை பக்கவாட்டில் மெல்ல நகர்த்தி அவளின் முதுகுக்குப் பின்னால் யாரையோ தேடினாள் மகேஸ்வரி.
“யாரைம்மா தேடுறே?....உன் மருமகனையா?”
தலையை மேலும் கீழும் ஆட்டினாள் தாய்.
“அவரு வரலைம்மா!..” என்று சொல்லி விட்டு இரண்டு விநாடிகள் நிறுத்தியவள் “உண்மையைச் சொல்லணும்னா...அவரு வர மாட்டாரும்மா!” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.
கலவரமாகிப் போன மகேஸ்வரி, பதட்டமாய்க் கேட்டாள்,
“ஏம்மா...என்னாச்சு?”
எங்கோ பார்த்தப்டி ஒரு வறண்ட சிரிப்பை வீசிய நிவேதிதா “அம்மா...அப்பா...வெறி நாயைச் சுட்டுட்டார்” என்றாள்.
“ப்ச்!...அது எப்பவோ நடந்த விஷயம் அதைப் பத்தி இப்ப என்ன?...நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு!” மகேஸ்வரி கடுப்புடன் கேட்டாள்.
“அதுக்குத்தாம்மா பதில் சொன்னேன்...“அப்பா...அந்த வெறிநாயைச் சுட்டுட்டாரம்மா!”
புதிராய் விழுந்த அந்த பதில் புரியாததால் “ஏய்...கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுடி” என்று அதட்டினாள் மகேஸ்வரி.
“அம்மா....முந்தா நாளு...அப்பா “நிர்மல்”ங்கற ஒரு வெறிநாயை என்கவுண்டர் பண்ணினாரல்ல?...அந்த நாய்தாம்மா இந்தத் தாலியோட நாயகன்!” தழுதழுத்த குரலில் சொல்லி விட்டு தாங்க முடியாமல் மௌனமாய் குலுங்கினாள் நிவேதிதா.
அவள் சொன்னதைக் கேட்டு முகம் வெளிறிப் போனார் தீனதயாள். பாய்ந்து மகளருகே வந்து
“அய்யோ...ராசாத்தி என்னை மன்னிச்சிடும்மா!...எனக்குத் தெரியாதும்மா...அவருதான் உன்னோட புருஷன்ன்னு எனக்குத் தெரியாதும்மா!” தான் ஒரு காவல் துறை அதிகாரி என்பதை மறந்து கதறியழுதார் தீனதயாள்.
“அய்யய்ய...அப்பா...இதுக்காக நீங்க ஏன் அழறீங்க?...சந்தோஷப் படுங்க!...அன்னிக்கு ஒரு வெறி நாயை நீங்க சுட்டுக் கொன்னப்ப...அதன் பின்புலத்தில் உள்ள உண்மைகள் புரியாம...நான் உங்க மேல கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டுப் போயிட்டேன்...! அதே மாதிரி...இன்னிக்கு ஒரு வெறி நாயை நீங்க சுட்டுக் கொன்னீங்க...இப்ப...இதன் பின்புலத்தில் உள்ள உண்மைகள் புரிஞ்சிட்டதால நான் திரும்பவும் உங்க கிட்டேயே வந்துட்டேன்!...அப்பா...என்னை ஏத்துக்குவீங்களாப்பா?”
தன் கால்களில் விழுந்து கதறிய மகளைத் தொட்டுத் தூக்கி அவள் முதுகில் ஆறுதலாய்த்