This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
சொல்லி ரஞ்சன் போனை வைத்தான். ரம்யாவின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. ஹாஸ்டல் சாப்பாடு உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் உடல் பலவீனமாவதை அவள் அறியவில்லை. ஹாஸ்டலின் சுகதாரமில்லாத தண்ணீரினால் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டு முகத்தில் வெள்ளைப் புள்ளிகள் வந்தன. முதலில் அதைக் கவனிக்காதவள், சிறிது பரவவும் கூச்சப்பட்டுக் கொண்டு, துப்பட்டாவால் பாதி முகத்தை மறைத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்தாள்.
ப்ராஜெக்ட் முடித்துக் கல்லூரிக்குப் பல நாட்களுக்குப் பின்னர் வந்தவள், தினேஷைத் தான் சந்திக்க எண்ணினாள். ஆனால் அவன் அன்றைய தினம் வகுப்புக்கு வரவில்லை. தோழிகளிடம் பேசுகையில் மட்டுமே ரம்யா தன் முழு முகத்தைக் காட்ட, ரதி அவளிடம், இதே மாதிரி புள்ளிப் புள்ளியா எப்பவுமே உன் முகம் மாறிடுச்சுன்னா என்னடி பண்ணுவ? என்று போலி அக்கறையுடன் கேட்க, முகம் அப்படியாச்சுனா என்ன பண்ண முடியும். என்னோட முகம் வேணா மாறும், நான் நானாத் தான் இருப்பேன். மத்தவங்க ரொம்ப அதிர்ச்சியாகப் பார்க்கிறாங்கன்னு தான் துப்பட்டாவில் முகத்தை மறைச்சேன். எனக்கு எந்த வருத்தமும் இல்ல. என்றாள். இப்படியே தினேஷ் முன்னாடி போயிடாத உன் மூஞ்சப் பார்த்து பயந்து ஓடிறப் போறான் என்றாள் வாணி. என் முகம் எப்படி இருந்தாலும் எப்பவும் அவன் என்னை விட்டு ஓடமாட்டான் என்றாள் ரம்யா. இதற்கு மேல் அவளிடம் வம்பளந்தால் இழப்பு தங்களுக்குத் தான் என்று இருவரும் நகர்ந்தனர். நல்லாவே பதில் சொன்னடி என்றாள் தேவி. ஒரு வாரம் ஓய்வெடுத்துட்டு ரிப்போர்ட்ல ஒர்க் பண்ணலாம் ரம்யா. முதலில் உன் உடம்பைப் பார்த்துக்கோ என்று தேவி சொல்ல, இம்முறை சரியென்று கேட்டுக்கொண்டாள் ரம்யா. அடுத்த தினம், ரம்யாவின் முகத்தில் கன்னங்கள், மூக்கு, நெற்றி என வறண்டு, தோல் உரிய, அம்மா மிகவும் பயந்துவிட்டார். புள்ளைய வீட்டோட வச்சிருக்காம, ஹாஸ்டலில் விட்டு முகத்தைப் பாழாக்கிட்டமே என்று புலம்பினார். தோல் மருத்துவர் கொடுத்த மாத்திரைகள், க்ரீம் என்று பயன்படுத்தியதில் அவளின் முகம் விரைந்து குணமாகி முன்போலவே ஆகிவிட்டாள்.
ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டைத் தயார் செய்து, கைடின் ஒப்புதலும் பெற்றுவிட்டாள். இன்னும் செமினார் மட்டும் தான் பாக்கியிருந்தது. இறுதி ஆண்டில் இருந்த இரண்டு தியரி பேப்பர்களில் நடத்த வேண்டியிருந்த சில பாடங்களை நடத்திமுடிக்க இறுதி மாதத்தை ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொண்டனர். தினமும் இரு வகுப்புகள் இருக்கும். பாடங்கள் எளிதாகவே இருந்தன. மீதி இருந்த நேரத்தை, மற்ற மாணவர்களின் வேலைவாய்ப்புப் பயிற்சிக்காக ஒதுக்கினர். தினேஷும் தனது ப்ராஜெக்டில் மும்முரமாக இருந்தான். எப்போதாவது ஒரு சமயம் கல்லூரி வளாகத்தில் எங்காவது பார்த்துக் கொள்ள நேரிடுகையில், அந்த ஒரு பார்வைக்காகவே யுகம் யுகமாகத் தவம் செய்து காத்திருந்தது போலிருக்கும் ரம்யாவுக்கும் தினேஷுக்கும். தனது
This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.