This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
எண்ணினாள்.அவளின் குடும்பத்தில் எல்லாரிடமும்,தனது தோழி சத்யாவிடமும் விடைபெற்றுக் கொண்டு அம்மா, அப்பாவுடன் சென்னைக்குக் கிளம்பினாள். அப்பா, அம்மா அவளைக் கம்பெனி கொடுத்த தங்குமிடத்தில் விட்டுவிட்டு, அங்கேயே அருகில் இருந்த ஒரு ஓட்டல் அறையில் அவர்கள் தங்கினர். ரம்யா கம்பெனியில் பணியில் சேர்வதில் சம்பந்தமானவற்றில் ஈடுபட்டு இருக்கையில், அவர்கள் இடமிடமாக வெயிலில் அலைந்து திரிந்து அவள் தங்குவதற்கு ஹாஸ்டல் தேடினர். கடைசியில், கன்னியாஸ்திரிகளால் பெண்களுக்காக மட்டும் நடத்தப்படும் ஹாஸ்டலில் தங்க இடம் கிடைத்தது. அது மிகவும் கண்டிப்பான சிஸ்டரின் தலைமையில் நடக்கும் ஹாஸ்டல் என்பதில் அப்பாவிற்குத் திருப்தி. அவளின் கைச்செலவுக்குப் பணம் கொடுத்துவிட்டு ஊருக்குக் கிளம்பினார். ரகு அவளின் செல்போனில் அடிக்கடி கால் செய்தான். அக்கா என்றான் தழுதழுத்த குரலில் முதன்முறையாக, இங்கே நீ இருக்கும் போது சண்டை போட்டுட்டே இருந்தேன். நீ போனதுக்கு அப்புறம் ரொம்ப போரடிக்குதுக்கா என்று சொன்னான். அவளுக்கும் அழுகையாக வந்தது. அன்றைய தினம் அம்மா, அப்பா ஊர் திரும்பும் தகவலை அவனிடம் சொன்னாள்.
கண்மணியிடம் சொல்லி கார்த்திக் மூலம் தற்போது தான் வைத்திருக்கும் செல்போன் நம்பரை தினேஷ் கையில் கிடைக்கச் செய்தாள் ரம்யா. அவள் வேலைக்கு சேர்ந்த முதல் வாரமே, ரயில் நிலையத்தில் வைத்து அவளைப் பார்க்க வந்தான் தினேஷ். ஒரு கட்டுமான நிறுவனத்தில் அவனுக்குப் பணி. வெயில் நின்று நின்று அவன் கருத்தும் இளைத்தும் விட்டது ரம்யாவுக்குக் கஷ்டமாக இருந்தது. அவனைப் பார்த்ததும் முதல் கேள்வி, “சாப்பிட்டியா?” என்று தான். அவனைக் கரம் பிடித்து அழைத்து அருகிலிருந்த மெஸ்ஸில் நுழைந்தாள். நெடுநாள் கழித்து இருவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். இனிமேல் இது மாதிரி ஏதேனும் ஒரு வெளியிடத்தில் மாதம் ஒரு முறை சந்தித்துக் கொள்ளலாம் என்றும், தினமும் போனில் பேசிக் கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தார்கள்.
தத்தித் தடுமாறி, கம்பெனியின் பயிற்சித் தேர்வுகளை முடித்து, ப்ராஜெக்ட்டிலும் நுழைந்து விட்டாள் ரம்யா. தினேஷ் பகுதி நேர மேற்படிப்பில் இணைந்துவிட்டான். அவனுக்கும் வேலை படிப்பு என்று நேரம் சரியாக இருந்தது. ரம்யா தினமும் காலையும் மாலையும் அம்மாவிடம் செல்போனில் பேசுவாள். தினேஷிடம் மதியமும் இரவும் பேசுவாள். அவள் “சாப்பிட்டியா?” என்று கேட்கும் ஒரு வார்த்தையே அவன் பசிதீர்க்கும். இரவில் தாலாட்டு அவள் பாடிட அவன் கண்ணுறங்கும். சுமந்து பெறாமலே தாயன்பையும் தாலி கழுத்தில் ஏறாமல் மனைவியின் அக்கறையும் அவளிடமிருந்து அவனுக்குக் கொட்டிக் கிடைக்கும். அவளுக்கோ நாளின் எந்நேரமும் அடிமனதில் அவன் நினைவே ஊற்றெடுக்கும். சில நேரம் தான் மூச்சு விடுவதே அவனை நினைக்கத் தானோ என்றே தோன்றும். தன்னைப் பெற்றெடுத்த அம்மா பாசமாய்
This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.