“ஆம்...மூன்றாம் தளத்தில் உள்ள ஒரு கடையின் உட்சுவற்றிலதான் சவங்கள் சயனித்துக் கொண்டிருக்கின்றன!”
“இ...ன்..னு...மா.. சாமீ?”
“ஆம்...சுவற்றை உடைத்துப் பாருங்கள் உண்மை புரியும்!”
“சரி” என்று தலையாட்டிய சாம்பசிவம் சன்னமான குரலில் கேட்டார் “சாமீ..அதெல்லாம் யார் செய்த வேலை?”
“உங்கள் காவல் துறை அதிகாரிகளை வரச் சொல்லுங்கள்...கண்டுபிடிப்பார்கள்”
“இப்ப..இப்பவே வரச் சொல்றேன் சாமீ”
“இப்போது வேண்டாம்!...இரவு முழுவதும் கண் விழித்திருந்த எனக்கு கொஞ்சம் ஓய்வு வேண்டும்!...அதனால் நான் இப்போது சென்று விட்டு மதியம் மூன்று மணிக்கு திரும்ப வருகிறேன்!...அப்போது அவர்களையும் வரச் சொல்லுங்கள்!”
“அப்படியே செய்கிறேன் சாமீ”
“முடிந்தால்...இன்றைக்கே இடிக்க ஏற்பாடு செய்யுங்கள்!”
அரைமனதுடன் தலையாட்டினார் சாம்பசிவம்.
****
தன் மகள் படிக்கும் பள்ளியில் பேரண்ட்ஸ் மீட்டிங்கில் அமர்ந்திருந்த ஏ.சி.தீனதயாளின் பாக்கெட்டிற்குள் சைலண்ட் மோடில் இருந்த மொபைல் சத்தமில்லாமல் அதிர்ந்தது.
“ப்ச்!” சலித்தவாறே எடுத்துப் பார்த்தார்.
சாம்பசிவம்.
“ம்..சொல்லுங்க மிஸ்டர்.சாம்பசிவம்!” சன்னக் குரலில் கேட்டார்.
“வந்து...சார்...ஒரு முக்கியமான இஷ்யூ...நீங்க கண்டிப்பா நேர்ல வர வேண்டியிருக்கும்!”
“இப்பவா?”
“இல்லை...மதியம்..மூணு மணிக்கு காம்ப்ளக்ஸ் வந்தாப் போதும்!”
சாம்பசிவத்தின் குரலில் இருந்த அதீத நடுக்கமும், அபரிமிதமான படபடப்பும் ஏசி தீனதயாளுவிற்கு வேறு விதமான சந்தேகத்தைத் தோற்றுவிக்க “சாம்பசிவம்...நம்பூதிரி நல்லா இருக்காரில்ல?” கேட்டார்.
“அவர் நல்லா இருக்கார் சார்...ஆனா...”” சாம்பசிவம் இழுக்க
“என்ன சாம்பசிவம்...ஏதாச்சும் அசம்பாவிதமா?”
“வந்து...கிட்டத்தட்ட அப்படித்தான் சார்!”
“இட்ஸ் ஓகே!...நான் மூணு மணிக்கு கண்டிப்பா வந்துடறேன்!” சொல்லிவிட்டுத் தொடர்பைத்