(Reading time: 10 - 20 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

அவர்கள் இருந்தனர். சத்யா திருமணம் முடிந்து உள்ளூரில் இருந்ததால், அவளால் வரமுடியவில்லை எனினும் அவளின் முழு ஆதரவு ரம்யாவின் முடிவுக்குத் தான். கண்மணி வெளிநாட்டிலும், தேவி வெளியூரிலும் இருந்ததால் அவர்களும் வரமுடியவில்லை. தினேஷின் சில நண்பர்கள், ரம்யாவின் பணியிடத் தோழிகள் என அழைத்தவர்கள் அனைவரும் வந்திருந்தனர்.

நல்ல நேரமெல்லாம் பார்க்காமல், நண்பர்களின் உற்சாகக் குரல்கள் சூழ, தினேஷ் ரம்யாவின் கழுத்தில் தாலி கட்டியபின்னர், இருவரும் மலர்மாலைகளை மாற்றிக் கொண்டனர், அதன் பின்னர் அவர்களின் இனிஷியல் ஆர்டி என்று பொறித்த வெள்ளியாலான மோதிரங்களை மாற்றிக்கொண்டனர். பதிவாளர் அலுவலக திருமணப்பதிவு புத்தகத்தில் தத்தம் கையொப்பத்தையிட்டு திருமண நிகழ்வினைப் பதிவு செய்தனர். சில நண்பர்கள் தங்கள் செல்போன் கேமராவில் புகைப்படம் எடுத்தனர். ஒரு வாரத்தில் அவர்கள் திருமண சான்றிதழை வாங்கிக் கொள்ளலாம் என்று பதிவாளர் கூறவும், அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.அலுவலக வளாகத்தின் வெளியில் வந்ததும் , தினேஷ் ரம்யா தங்கள் நண்பர்களுடன் சேர்ந்தவாறு புகைப்படங்கள் மொபைல்களிலும் டிஜிடல் கேமராக்களிலும் எடுத்துக் கொள்ள சிறிது நேரம் நின்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் திருமண விருந்திற்காக அன்னை  இல்லம்  கிளம்பினர்.

அவர்கள் அந்த ஹோமை அடைந்து, அன்னை இல்லத்தின் வார்டனைச் சந்தித்தனர். அவர் ஒரு அறையில் இருந்த குழந்தைகளைப் பற்றி தகவல்கள் எழுதிக் கொண்டு இருந்தார். இவர்கள் வருவதைப் பார்த்ததும்,

“வாங்க ரம்யா! வாங்க தினேஷ்! வாழ்த்துக்கள்!

இந்த வாரம் ஹோமில் வேலைகள் சற்று அதிகம்! உங்க திருமணத்திற்கு வரமுடியல! மன்னிக்கணும்! என்றார்.

கடந்த வாரம் குழந்தைகள் பாதுகாப்பு  ஹெல்ப்லைன் மூலம் இரண்டு புதிய குழந்தைகள் ஹோமுக்கு வந்தனர். இந்த இருவரும்  பெற்றோர் இல்லாமல் ரயில் நிலையத்திற்கு அருகே மீட்கப்பட்டனர் என்று இரு சின்னஞ்சிறு குழந்தைகளைக் காட்டினார். ஒரு பெண்ணும் ஒரு பையனும். சிறுமிக்கு இரண்டு வயது, பையனுக்கு ஒரு வயது என மதிப்பிட்டு இருந்தனர். இருவரும் இவ்வளவு சிறிய வயதில் தந்தை தாயை இழந்திருந்தார்கள், அவர்களுடைய பெயர், பெற்றோர் அல்லது உறவினர்களைப் பற்றி சொல்ல முடியவில்லை. அவர்களை யாரேனும் தத்தெடுக்கும் வரை அவர்களுக்கு ஒரு வளர்ப்புப் பெற்றோர் பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றார் வார்டன்.

ரம்யா தினேஷிடம், "நமக்குப் பிறக்கப் போகும்  குழந்தையுடன் ஒரு குழந்தையைத்

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

8 comments

  • மிக்க நன்றி தோழி :thnkx: பெத்தவங்க சம்மதிப்பாங்கன்னு எவ்வளவு காலம் காத்திருக்கிறது. சில நேரம் பெத்தவங்க புள்ளைங்க விருப்பத்தை சமூகம் என்ன சொல்லும்னு யோசிச்சிட்டு என்ன முடிவெடுக்கவென்றே தெரியாமல் காலம் கடத்துவாங்க. என்ன பண்றது இப்படி சூழ்நிலைல :Q:
  • Ivanga parents kitta sollittu seithu irukalam..unga ishtam solla matanga than but donno what to say however their call on adopting the kids was awesome :hatsoff: interesting flow ma'am 👏👏 👏👏👏👏👏 avanga love and trust ippadi irukatum eppome...and.hope their parents don't disturb them.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.