“ஐ நோ!...உங்ககிட்ட ஏதோ தப்பிருக்கு...அங்க சுவற்றுக்குள்ளார பொணங்களை அடுக்கி வெச்சுக் கட்டினது நீங்கதான்!...சொல்லுங்க...எதுக்கு...எதுக்கு..அப்படிச் செஞ்சீங்க?” தன் இருக்கையை விட்டு எழுந்து அந்த சுப்ரமணியராஜாவின் இருக்கை முன் குனிந்து அவர் கண்களை ஊடுருவிப் பார்த்தபடியே கேட்டார் ஏ.சி.
சட்டெனத் தலை குனிந்து மௌனமாகிப் போன சுப்ரமணியராஜா சில நிமிடங்களுக்குப் பிறகு கரகரத்த குரலில் பேச ஆரம்பித்தார்
“உண்மைதான் சார்..நீங்க சொன்னது உண்மைதான் சார்!...அங்க..அந்தச் சுவற்றுக்குள்ளார டெட் பாடீஸ் வெச்சுப் பேஸ்ட் பண்ணினது நாந்தான்!...பட்...அதெல்லாம் மர்டர் செஞ்ச பாடீஸ் இல்லை!...”
“பின்னே?...நரபலிக்காக செஞ்சவைகளா?” ஏ.சி. வேறொரு கோணத்தில் கேட்டார்.
“அய்யய்யோ..அப்படியெல்லாம் எதுவுமில்லை சார்!...ஒரு விபத்தால விழுந்த பாடிகள்!...ஒரு தடவை “அர்ஜண்டா பத்தே நாள்ல வேலைகளை முடிச்சு காம்ப்ளக்ஸோட திறப்பு விழாவைப் பண்ணியே ஆகணும்!”ன்னு காம்ப்ளக்ஸ் ஓனர் என்னை அவசரப்படுத்தியதாலே....நைட் டைம்ல கூட வேலைகளை நிறுத்தாம...இருபத்திநாலு மணி நேரமும் ஆட்களை வேலை செய்ய வெச்சேன்!...”
அவரையே கூர்ந்து கவனித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார் ஏ.சி.
“அப்படித்தான் ஒரு நாள் நைட் வேலை செஞ்சிட்டிருக்கும் போது..மூணாவது ஃபுளோர்ல மூணு ஆட்கள் மொசைக் பாலீஸ் பண்ற வொர்க்ல ஈடுபட்டிருந்தாங்க!...அப்ப...அந்த பாலீஸ் மெஷினுக்கு வர்ற ஒயர்ல எங்கியோ மின் கசிவாகி...அந்த மின்சாரம் தரையில் பாய...ஈரத் தரை மொத்தமும் எலக்ட்ரிக் பாஸ் ஆனதில அந்த மூணு பேருமே ஸ்பாட்லியே அவுட்டாகிட்டாங்க!”
மெலிதாய் முறுவலித்த ஏ.சி. “இல்லையே....மொத்தம் அஞ்சு எலும்புக் கூடுகள் அல்ல எடுத்திருக்காங்க?”
“ஆமாம்...அப்ப சத்தம் கேட்டு வெளியே மாடிப் படிக்கருகே சுவற்றுக்கு பட்டி பூசிக் கொண்டிருந்த ரெண்டு பேர் அவசர அவசரமா அந்த இடத்திற்கு ஓடி வந்தார்கள்...வந்தவர்கள் விஷயம் தெரியாமல் அதே ஈரத்தரையில் கால் வைக்கப் போக அவர்களும் இறந்துட்டாங்க!...அப்ப எதேச்சையா அந்த இடத்துக்கு வந்த நானும் எஞ்சினீயரும் எல்லோரும் கீழே கிடக்கறதைப் பார்த்து அதிர்ச்சியானோம்!...நான் எடுத்த எடுப்பில் உள்ளே ஓடத்தான் முயற்சி செய்தேன்!..ஆனால் தன் அனுபவத்தின் காரணமாக சட்டென்று விபரீத்த்தை யூகித்து விட்ட எஞ்சினீயர் என்னைப் போக விடாமல் தடுத்து, தரையில் கரண்ட்