(Reading time: 9 - 18 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

பாய்ஞ்சுக்கிட்டிருக்கற விபரத்தை சொல்ல...மெயினை ஆஃப் செய்து விட்டு டார்ச் லைட் வெளிச்சத்தில் வந்து பார்த்தோம்....ஐந்து பிணங்கள்!...ஒன்றன் மேல் ஒன்றாக!...

 “ஹாரிபிள்என்றார் ஏ.சி..

 “அய்யய்யோ...பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டேனே!என்று பீதியடித்துக் கிடந்த என்னைத் தேற்றும் விதமாய் அந்த எஞ்சினீயர்

சார்...நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க!..இவங்க எல்லோரும் வெளியூர்க்காரங்க...இவங்க இங்க வந்து வேலை பார்க்கறது...இவங்க குடும்பத்து ஆட்களுக்கும் தெரியாது...இவங்க உறவுக்காரங்களுக்கும் தெரியாது!...அதனால...நீங்க உம்ன்னுஒரு வார்த்தை சொல்லுங்க!...நான் இந்த அஞ்சு பிணங்களையும் ஏதச்சும் ஒரு செவுத்துக்குள்ளார வெச்சுக் கட்டிடறேன்!...சுத்தமா யாருக்குமே தெரியாது!

நிஜம்மாவா சொல்றே?...அது சாத்தியமா?”

நான் சாத்தியமாக்கறேன்...நீங்க அதுக்காக என்னைக் கொஞ்சம் பெரிசா கவனிச்சிடுங்க போதும்

 “பெரிசா...ன்னா?”

 “ஒரு இருபத்தியஞ்சு லட்சம்!

 “எனக்கு அப்போதிருந்த சூழ்நிலையில் அதை விட்ட வேற வழியே தெரியலை!...அதனால ஒத்துக்கிட்டேன்!...ஆனா...இந்த விஷயம்...இப்ப...இருபத்தியஞ்சு வருஷங்களுக்கப்புறம் வெளிய வரும்னு நான் சத்தியமா நெனச்சுக் கூடப் பார்க்கலை!

தலையை இட வலமாய் ஆட்டிய ஏ.சி. சார்...இப்பக் கூட அந்தக் குற்றத்தை வெளியுலகத்துக் கொண்டு வந்தது நானோ...எங்க டிபார்ட்மெண்ட்டோ அல்ல...

 “பின்னே?”

அந்தச் சுவர்களில் தவமிருந்த பிணங்கள்!

புரியலையே சார்!

செத்துப் போன அந்த அஞ்சு பேரோட ஆவிகதான் இந்த விஷயத்தை வெளிய கொண்டு வந்திருக்குதுக!

.சி.சொன்னதைக் கேட்டு “கட...கடவென வாய் விட்டுச் சிரித்த சுப்ரமணியராஜா ஏ.சி.சார்!...நீங்க ஒரு போலீஸ் அதிகாரிங்கறதை மறந்திட்டுப் பேசறீங்க!

 தீனதயாள் அவரை முறைப்பாய்ப் பார்க்க

 “பின்னே என்ன சார்?..மொதல்ல ஏதோ ஒரு இங்கிலீஷ் ஹாரர் படத்தோட சி.டி.யைக் கொண்டாந்து போட்டுக் காண்பிச்சு.. இதெல்லாம்...இங்க நடந்திச்சுன்னு கதை

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.