விட்டீங்க!...இப்ப என்னடான்னா... “செத்துப் போன அந்த அஞ்சு பேரோட ஆவிகதான் இந்த விஷயத்தை வெளிய கொண்டு வந்திருக்குதுக”ன்னு மெகா ரீல் விடறீங்க!...பேசாம நீங்க சினி ஃபீல்டுக்கு போயிடுங்க சார்...நல்ல சக்ஸஸ்ஃபுல் டைரக்டரா வருவீங்க!” என்றார் அந்த சுப்ரமணியராஜா சற்றும் பயமில்லாமல்
“ஸ்டாப் இட் நான்சென்ஸ்!...நான் சீரியஸா பேசிட்டிருக்கேன்...நக்கலா பண்றே?” ஏ.சி.கடுப்பாகிக் கத்த
“சார்...உங்க அதட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படற ஆள் நானில்லை!...இருபத்தியஞ்சு வருஷத்துக்கு முன்னாடி செத்துப் போனவங்களோட ஆவியாம்...செவுத்துக்குள்ளார உட்கார்ந்திட்டு தவம் செய்யுதுகளாம்....ராத்திரில வெளிய வந்து உலாத்துதுகளாம்!...சொல்றது யாருன்னா..ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர்!..ப்ர்ர்ர்ர்...” என்று கிண்டலாய் சப்தமெழுப்பி விட்டு “ஏ.சி.சார்...முடிஞ்சா என் மேல கேஸ் போடுங்க!...நான் ஒரே வார்த்தைல அந்தக் கேஸை உடைக்கறேன்!”
தீனதயாள் புருவத்தை நெரித்துக் கொண்டு அவரைப் பார்க்க
எப்படின்னு கேட்கறீங்களா?... “எனக்கும் இதுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது...வேணுமின்னா கட்டிடம் கட்டிய அந்த புராஜக்ட் எஞ்சினீரைப் போய் விசாரிங்க!”ன்னுட்டு போய்க்கிட்டே இருப்பேன்!”
ஏ.சி.அமைதியாய் நிற்க
“ஏ.சி.சார்...உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியாதா?...அந்த புராஜக்ட் எஞ்சினீயர் இப்ப உயிரோட இல்லை!” சொல்லி விட்டுச் சிரித்த சுப்ரமணியராஜா “வேணுமின்னா இப்படிச் செய்யுங்களேன்..காம்ப்ளக்ஸ்ல இருக்கற ஆவிக கிட்டச் சொல்லி...அந்த புராஜெக்ட் எஞ்சினியர் ஆவி மேல கேஸ் போடச் சொல்லுங்களேன்!”
எக்கச்சக்கமாய்க் கொதித்துப் போன ஏ.சி.தீனதயாள் “விருட்”டென்று எழுந்து அங்கிருந்து கிளம்பினார். அவர் மனம் இந்தக் கேஸை எப்படி டீல் பண்ணுவது?...யார் யாரையெல்லாம் குற்றவாளிகள் பட்டியலில் இணைப்பது? என்கிற யோசனையில் தீவிரமானது.
தொடரும்...
Next episode will be published on 8th June. This series is updated weekly on Tuesdays.