தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 07 - முகில் தினகரன்
“சூடாமணி ரைஸ் மில்” கேட்டினுள் தனசேகரின் தந்தை பொன்னுரங்கத்தின் கார் நுழைந்து, உள்ளேயிருந்த ஒரு மரத்தடியில் நின்றது. அதனுள்ளிருந்து இறங்கிய பொன்னுரங்கமும், சுந்தரியும் நேரே அலுவலகம் என்று போர்டு வைத்திருந்த அந்தப் பகுதிக்குச் சென்றனர்.
அலுவலக மேனேஜர் சுந்தரம், தூரத்தில் வரும் போதே, அவர்களை அடையாளம் கண்டு கொண்டு, வேக வேகமா அவர்களை நோக்கி ஓட்டமும் நடையுமாய் வந்தார்.
“அய்யா வாங்க!...அம்மா வாங்க” என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்.
“என்னப்பா...உங்க முதலாளி ராஜய்யா இருக்காரா?” பொன்னுரங்கம் நடந்தவாறே கேட்டார்.
“ம்...இருக்காருங்க அய்யா!...உள்ளார குடோன் பக்கம் போயிருக்கார்!...நீங்க அவரோட ரூம்ல உட்காருங்க அய்யா...நான் போய் தகவல் சொல்லி அவரைவரச் சொல்றேன்” என்று சொல்லி விட்டு, அவர்களுக்கு முதலாளியின் அறை இருக்குமிடத்தைக் காட்டி விட்டு குடோனை நோக்கி ஓடினார் மேனேஜர்.
முதலாளி அறை என்பது படோடோபமாக இல்லாமல் படு சாதாரணமாயிருந்தது.
அங்கிருந்த ஒரு மேஜைக்கு எதிரேயிருந்த மர நாற்காலிகளில் அமர்ந்து காத்திருந்தனர் பொன்னுரங்கமும், சுந்தரியும்.
சரியாக ஐந்தாவது நிமிடம் அந்த அறைக்குள் வந்த ரைஸ் மில் முதலாளி ராஜய்யா, வரும் போதே, “வாங்க பொன்னுரங்கம் அய்யா...வாங்க!...வாங்க” என்று உரக்கச் சொல்லிக் கொண்டே வந்தார்.
தன் இருக்கையில் அமர்ந்தவர், சுந்தரியைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, “கேள்விப்பட்டேன்...மகனுக்குக் க்ல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கீங்க!ன்னு...ரொம்ப சந்தோஷம்!...அதை விட சந்தோஷம் எனக்கு பத்திரிக்கை வைக்க நீங்க ரெண்டு பேரும் நேரில் வந்தது” என்றார்.
“ஒரு சின்ன திருத்தம்...உங்களுக்கான பத்திரிக்கையை நாங்க உங்க வீடு தேடி வந்து வைப்போமே தவிர...இப்படி மில்லுல வந்து வைக்க மாட்டோம்!...அது மரியாதை இல்லை...தவிர உங்க வீட்டுக்காரம்மாவையும் நேரில் பார்த்து அழைப்பதுதானே முறை” என்றாள் சுந்தரி.
அதைக் கேட்டு, “ஹா...ஹா...ஹா”வென உரக்கச் சிரித்த ராஜய்யா, “சொல்லுங்க வேற என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?” பட்டென்று கேட்டார்.
“வந்து...உங்க ரைஸ் மில்லுல...முரளின்னு ஒரு பையன் வேலை பார்க்கிறானா?” சுந்தரி கேட்டாள்.
“ஆமாம்...கணக்கு வழக்கு பார்த்திட்டிருக்கான்!...ஏன் அவனுக்கென்ன?...ஏதாவது தப்பு தண்டா