“அய்யோ...அவன் எப்பவும் நல்லா இருக்கணும்!..ராஜாவாட்டம் இருக்கணும்!ன்னுதான் நான் நெனைப்பேன்!....அதுதான் என் ஆசை...என் லட்சியம்”
“ஆனா...அந்த ராமலிங்க பூபதி வீட்டில் இருப்பவர்கள் அப்படி நினைக்கலையே தம்பி!...உன் கூட எங்க மகன் பழகறான் என்கிற காரணத்தினாலேயே அவங்க இந்தக் கல்யாணத்தை நிறுத்திடக் கூடத் தயாரா இருக்காங்க” பொய்யை அள்ளி வீசினாள் சுந்தரி.
சட்டென்று கையை நெஞ்சில் வைத்த முரளி, “அடக் கஷ்ட காலமே!...அப்படி ம்ட்டும் ஏதாச்சும் செஞ்சிட்டாங்கன்னா...தனசேகர் தாங்க மாட்டான் அம்மா!...அவன் அந்தப் பொண்ணு மேல் ரொம்ப ஆசை வெச்சிருக்கான்!...” என்று சொல்ல,
“அப்ப....நீ விலகிப் போயிடறதுதான் நல்லதுப்பா!...நீ தப்பா நினைக்கலேன்னா...நான் ஒண்ணு சொல்றேன்!....என் மகனோட இத்தனை வருஷம் பழகின காரணத்துக்காக....உனக்கு நான் ஒரு தொகை தர்றேன் வாங்கிட்டு...குடும்பத்தோட இந்த ஊரை விட்டுப் போய்...வேற ஏதாவது ஒரு ஊர்ல ஏதாச்சும் கடைகிடை வெச்சுப் பொழைச்சிக்கோ...என்ன?” நைஸாக அந்தப் பொறியை வைத்தார் பொன்னுரங்கம்.
“அய்யா...தனசேகரோட நன்மைக்காக நான் எது வேணாலும் செய்யத் தயாராயிருக்கேன்!..இந்த உயிரைக் கூட கொடுக்கத் தயாராயிருக்கேன்!...ஆனா..இனிமேல் அவனைப் பார்க்காம....பேசாம...இருக்கணும்!கறதை....நினைச்சுப் பார்க்கவே பயமாயிருக்குங்க அய்யா”. தழுதழுத்த குரலில் சொன்னான் முரளி.
“வேற வழியில்லைப்பா...சில நன்மைகளுக்காக...சில விஷயங்களை...நம்ம மனசு ஏத்துக்காமல் போனாலும்...செஞ்சுதான் தீரணும்!” என்று சொல்லியவாறே முரளியின் அருகில் வந்து, அவன் கையில் பணக்கட்டைத் திணித்தார் பொன்னுரங்கம்.
அதை வாங்க மறுத்து விட்டு உடனே எழுந்த முரளி, “அய்யா...நீங்க கவலைப்படாம போங்க!...இன்னிக்கு ராத்திரியே நானும் என் அம்மாவும், தங்கையும் இந்த ஊரை விட்டே போயிடறோம்!...” என்று சொல்லி விட்டு நகர,
“தம்பி...தயங்காம அய்யா குடுக்கற பணத்தையும் வாங்கிங்கப்பா...நிச்சயம் அது உங்களுக்கு உதவும்” என்றாள் சுந்தரி.
“இல்லைங்க அம்மா!...நீங்க குடுக்கற இந்தப் பணம்...நானும் தனசேகரும் இருபத்திஅஞ்சு வருஷமா வெச்சிருந்த நட்புக்கு நீங்க நிர்ணயிச்சிருக்கற விலை!...ஹும்...விலை குடுத்து வாங்க எங்க நட்பு...வெறும் பொருளில்லை அம்மா!...அது...எங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கற பரஸ்பர பக்தி!...”
விழியோரம் பீறிட்டுக் கிளம்பிய கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, வேக வேகமாய்