பண்ணிட்டானா?” ராஜய்யா கேட்க,
“சேச்சே...அப்படியெதுவும் இல்லை!...நாங்க அவன் கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்று பொன்னுரங்கம் சொன்னதும், ஆச்சரியமானார் அந்த ராஜய்யன்,
“என்னங்க அய்யா...நீங்க எவ்வளவு பெரிய மனிதர்...நீங்க போய் அந்தப் பையனைப் பார்ப்பதற்காக நேரில் வந்து...அனுமதி கேட்டுக்கிட்டு...நீங்க வீட்டுக்குப் போங்க...நான் அந்தப் பையனை உங்க வீட்டுக்கு வரச் சொல்றேன்” என்றார்.
“இல்லை...சில விஷயங்களை நாங்க வீட்டுல வெச்சுப் பேச முடியாது!...அதான் இங்க வந்தோம்” என்றாள் சுந்தரி.
“எனக்கு ரொம்பவே வியப்பா இருக்குங்க அய்யா!...அவனொரு தாழ்ந்த சாதிப் பையன்...அவனைப் போய் ஒரு பெரிய மனுஷனா மதிச்சு...நீங்க வந்து.!...ம்ஹ்ஹும்...ஒண்ணும் புரியலை” என்ற ராஜய்யன், அறையின் வாசலைப் பார்த்து, “இந்தாப்பா...முருகு...அந்த முரளிப் பையனை வரச் சொல்லுப்பா” என்றார்.
வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் உள்ளே ஓட, “நாங்க அவன் கூட கொஞ்சம் தனியா பேசணும்!...இங்க அது மாதிரியான அறை எதாவது இருக்கா?”பொன்னுரங்கம் கேட்டார்.
“ஏன் இல்லாமல்?...வேலையாளுங்க உட்கார்ந்து சாப்பிடற சாப்பாட்டுக் கூடம் இப்ப...சும்மாத்தான் இருக்கும்!...அங்க கூட்டிட்டுப் போய் பேசுங்க” என்ற ராஜய்யா, “ஏதாவது பிரச்சினையா?...சொல்லுங்க அப்படி ஏதாச்சும் இருந்தா...பயலை கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிடறேன்!” சொன்னார்.
“சேச்சே...அந்த அளவுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை” என்றார்.
பத்து நிமிடத்தில் அந்த அறைக்குள் வந்த முரளி பொன்னுரங்கத்தையும், சுந்தரியையும் பார்த்துக் குழப்பமானான்.
“சேகரோட...அப்பாவும் அம்மாவும் எதுக்கு இங்க வந்திருக்காங்க?...”
“இந்தாப்பா...முரளி...இவங்க உன்கிட்ட ஏதோ பேசணுமாம்...அப்படியே சாப்பாட்டுக் கூடத்துக்குக் கூட்டிட்டுப் போய் அங்க பேசிட்டு வாங்க!” என்று ஆணையிடும் தொணியில் ராஜய்யா சொல்ல,
“சரிங்க முதலாளி” என்றபடி அந்த அறையிலிருந்து வெளியேறி சாப்பாட்டுக் கூடம் நோக்கி நடந்தான் முரளி.
போகும் வழியெங்கும் அவன் சிந்தனை தாறுமாறாய் ஓடியது. “என்கிட்டப் பேச இவங்களுக்கு என்ன இருக்கு?...ஒருவேளை பொண்ணு வீட்டுப் பக்கமிருந்து ஏதாச்சும் கம்ப்ளைண்ட் வந்திருக்குமோ?”
சாப்பாட்டுக் கூட்த்தின் முகப்பிலிருந்த ஒரு மேஜையைக் காட்டி, அதில் தனசேகரின்