“எதுக்கும் ஜாக்கிரதையாகவே போய்ட்டு வாங்க!”
“அடேங்கப்பா...என் பொண்டாட்டிக்குக் கூட இவ்வளவு அக்கறை இருக்காது...ஆனா உனக்கு இருக்கறதைப் பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமாயிருக்கு!” சுப்ரமணியராஜா சிரித்துக் கொண்டே சொல்ல,
“ஏன் சுத்தி வளைச்சுச் சொல்றீங்க?..ஸ்ட்ரெயிட்டாவே சொல்ல வேண்டியதுதானே?...”நீ சின்ன வீடு...உனக்கு இத்தனை அக்கறையா?”ன்னு சொல்லிவிட்டு அந்தக் கேரளம் முகத்தை வாட்டமாக வைத்துக் கொள்ள
துடித்துப் போனார் என்.அர்.ஐ.
“அது...வந்து...நீ ஏன் அப்படி நினைக்கறே?...நீயும் என்னோட பொண்டாட்டிதான்!” அவசரமாய்ச் சொன்னார்.
சட்டென்று தன் நைட்டியின் நெஞ்சுப் பகுதியை விலக்கிக் காட்டி “தாலி இல்லியே இங்க?”
“கட்டிட்டா போச்சு!...இந்தப் பிரச்சினை தீரட்டும்...அடுத்த நாளே உன்னையக் கூட்டிட்டுப் போய் ஏதாச்சுமொரு கோயில்ல வெச்சுத் தாலி கட்டிடறேன்!”
“அப்புறம்?”
“அப்புறமென்ன?...சிங்கப்பூர்தான்!” சொல்லியவாறே சுப்ரமணியராஜா அவள் கன்னத்தைக் கிள்ள
“அதெப்படி?...அங்கதான் உங்க வைப் உங்க கூடவே இருக்காங்களே?” விடாது கேட்டது கேரளக் குட்டி.
“ஸோ வாட்?...அவ ஒரு ஏரியாவுல இருந்தா...நீ இன்னொரு ஏரியாவுல இரு!...” என்றவர்
சட்டென்று ஞாபகம் வந்தவராய் வாட்சைப் பார்த்து விட்டு “சரி டியர்...மணி ஒன்பதாயிடுச்சு...நான் எல்லோரையும் “டாண்”னு ஒன்பதரை மணிக்கு ஹோட்டல் பார்க்-இன் வரச் சொல்லியிருக்கேன்!...அங்க அசெம்பிள் ஆகி...அப்புறம் அங்கிருந்து எல்லோரும் சேர்ந்தே அந்தக் காம்ப்ளக்ஸுக்குப் போவதாய்த் திட்டம்!”
“காம்ப்ளக்ஸ் அந்த நேரத்துல பூட்டி இருக்குமே?”
“நாந்தான் காம்ப்ளக்ஸ் ஓனர் சாம்பசிவத்தைக் கேட்டு சாவியை வாங்கி வெச்சிருக்கேனே?”
“வாவ்...புத்திசாலி” வாயெல்லாம் பல்லாக அவள் சொன்னாள்.
ஆனால் அவர் புத்திசாலி இல்லை என்பது அந்த இரவின் பிற்பகுதியில்தான் தெரிய வரும்.
தொடரும்...
Next episode will be published on 15th June. This series is updated weekly on Tuesdays.