தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 30 - முகில் தினகரன்
அதிகாலை நாலு மணி.
“சலங்கையிட்டாள் ஒரு மாது...சங்கீதம் நீ பாடு”. மொபைல் எழுப்பியது. “ப்ச்...யார்ரா அது?..இந்த நேரத்துல” திட்டிக் கொண்டே எடுத்துப் பார்த்தான் ரவீந்தர்.
கோகிலா.
“என்ன கவிஞரே?...தொந்தரவு பண்ணிட்டேனா?” கோகிலா கேட்க,
“அம்மாடி...காலங் காத்தால....நாலு மணிக்கு கால் பண்ணி தொந்தரவு பண்ணிட்டேனா?”ன்னு கேட்டா என்ன பதில் சொல்றது?...உண்மையைப் பேசணும்!ன்னா.... “ஆமாம்”ன்னு சொல்லணும்!....பொய் பேசணும்னா... “இல்லை”ன்னு சொல்லணும்!...நான் என்ன பேசறது?...உண்மையா?...பொய்யா?” திருப்பிக் கேட்டான் ரவீந்தர்.
“வந்து...ரெண்டும் வேண்டாம்!...மனசுல உள்ளதைப் பேசுங்க கவிஞரே!”
“அது செரி?...என்ன அதிசயம்?...நாலு மணிக்கே எந்திரிச்சிருக்கீங்க?” ரவீந்தர் கேட்டான்.
“தூங்கியிருந்தால்தானே?...எந்திரிப்பதற்கு?...நாந்தான் தூங்கவேயில்லையே?” என்றாள் கோகிலா.
“வொய்?..ஏன் தூங்கலை?” தெரியாதது போல் கேட்டான்.
“தூக்கம் வரலை” பட்டென்று சொன்னாள்.
“அதான்...ஏன்?ன்னு கேட்கிறேன்” என்றான் ரவீந்தர்.
“நீங்க டிரான்ஸ்பர்ன்னு கேள்விப்பட்ட பிறகு...எப்படிங்க தூங்க முடியும்?...” என்றாள் கோகிலா.
“அதுக்கு என்ன்ங்க பண்ண முடியும்?...நிர்வாகத்தின் கட்டளை...ஏத்துக்கிட்டுத்தானே ஆக வேண்டும்?” என்றான்.
“அப்ப...நான்?”
“உங்களுக்கு என்ன சாமி?...உள்ளூரிலேயே ஆபிஸ் ஜாலியா என்ஜாய் பண்ணுங்க” என்றான்.
“நான் அதைச் சொல்லலை!...நம்ம உறவு?” நேரடியாகவே கேட்டாள்.
“அதுக்கென்ன?...அந்த நட்புறவு தொடர்ந்துக்கிட்டே இருக்கும்!...போன்ல பேசுவோம்...வாட்ஸ்அப்...ஃபேஸ்புக்ல பேசுவோம்!...இந்த பிராஞ்ச்சுக்கு வந்தா உங்களைப் பார்க்கறேன்...பேசறேன்!” என்றான் ரவீந்தர்.
“உங்களுக்கு என்னைப் பிரிகிறோமே என்கிற வருத்தமே இல்லையா?” கோபத்தோடு கேட்டாள் கோகிலா.
“அது செரி....என்னை மாதிரி மார்க்கெட்டிங் ஆளுங்களோட தலைவிதியே இதுதான்!....ஒரு பிராஞ்சுக்கு போவோம்...ஒரு வருஷம் ஒன்றரை வருஷம் வேலை செய்வோம்...நிறைய பேர் பழகுவாங்க!...டக்குன்னு டிரான்ஸ்பர் போட்டுடுவாங்க!..அடுத்த ஊர் பிராஞ்சுக்குப் போவோம்...அங்கேயும் அப்படித்தான்!...இப்படியே ஒவ்வொரு ஊராய் போய்க்கிட்டே இருக்க