ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என பழைய பாடலை பாடவும் . . . ராகவனும் பத்மினியும் தங்கள் ரகசியம் வெளி வந்துவிட்டதா என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ச்சே இருக்காது மிகவும் திறமையாக தானே சிரித்து பேசி மகிழ்வது போல் நடித்துக் கொண்டிருக்கிறோம்” என கண்களால் பேசிக் கொண்டனர்.
இருவரும் தங்கள் குடும்பத்தினரை கவனிக்க அவர்கள் தம்தம் வேலையில் பிசியாக இருந்தனர். மீண்டும் தங்கள் முகத்தில் போலி புன்னகையை வரவைத்தனர்.
திருமணத்தில் வகைவகையான சாப்பாடு திண்பண்டங்கள் இருக்கும். ஆனால் பாவம் மணமகளும் மணமகனும் சரியாக ருசித்து சாப்பிட முடியாது. சடங்கு சம்பிராதயங்களால் நேரம் கடந்துவிட்டது.
“அந்த பாதாம் கீர் பிரமாதம்” என சிலர் தாங்கள் சாப்பிட்ட பலகாரங்களை சிலாகித்துக் கொண்டிருக்க அவை திவ்யமாய் பசியோடு இருந்த பத்மினி ராகவன் காதில் நாராசமாய் விழுந்து தொலைத்தது.
மணமக்களின் பெற்றோர் ஆனந்தமாய் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தனர். தாங்கள் கண்ட கனவு நினைவாகிறது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
ஆனால் தங்கள் பிள்ளைகளைப் பற்றி கற்றது கைமண் அளவு தான் என்று தெரியவில்லை பாவம்.
மணமக்கள் இருவரும் விவாக அழைப்பிதழ் அச்சடிக்கும் முன்பே தங்கள் விவாகரத்துக்கு அழைப்பிதழ் வைத்துவிட்டனர் என்பது யாருக்கும் தெரியாது?
ஆனால் ராகவனின் தந்தை விசு என்னும் விஸ்வநாதன். அவர் மட்டும் “ இருவரிடமும் என்னவோ சரியில்லயே” என அவ்வபோது யோசனையில் ஆழ்ந்தார் . ஆனால் “உனக்கு முன்னாடியே பொறந்தவன்டா நான் . . . என்ன பிரச்சனை வந்தாலும் ஒரு கை பார்த்திடுவோம்” என கெத்தாக வளம்வந்தார்.
நம் கதையின் நாயகன் ராகவன். வயது 29 சுருள்சுருளான முடி இல்லை அவ்வபோது ஹேர்ஸ்டைல் மாற்றுவான். ஆறடி இல்லை அதற்கும் மேலே . . . அடுத்த ஒரு வாரம் வரை மட்டுமே ஐ.டி. ஊழியன்.
ராகவனின் மூத்த சகோதரி ரம்யா அவள் கணவன் லட்சுமணன். திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மனைவி ரம்யா கிழித்த கோட்டை அந்த ராமனே வந்தாலும் இந்த லட்சுமணன் தாண்ட மாட்டான். அத்தனை பத்தினி பக்தி.
ராகவனின் தந்தை விஸ்வநாதன் என்னும் விசு. இந்த நொடி உங்கள் மனதில் தோன்றும் விசுவை அப்படியே இந்த கதைக்கு இறுத்திக் கொள்ளுங்கள். பி.எஸ்.என்.எல் (BSNL)லிருந்து