கொண்டார்.
அரசியல் சினிமா விளையாட்டு என அத்தனை துறை சார்ந்த வினாக்களுக்கும் சிரிப்போடு சிந்திக்கும் வகையில் விடையளிப்பார்.
“ஏன் இந்த பெயர்?” என அவரிடம் சிலர் கேட்டதுண்டு
“நாரதர் திரிலோக சஞ்சாரி. அவருக்கு எங்கு என்ன நடக்கிறது என்பது நன்றாக தெரியும். பத்திரிக்கைகார்களும் எல்லா இடத்திற்கும் சென்று செய்தி சேகரிப்பார்கள். அதனால் இந்த பெயர்” என்பார்.
அவர் மனைவி அலமேலு. வீட்டு நிர்வாகி. அவர் மிகவும் ஸ்டிரிக்ட் ஆபீஸர்.
அவர் லலிதா சஹஸ்ர நாமம் பாராயணம் செய்யும் போது பிரசவ வலி ஏற்பட்டது. முதல் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதற்கு லலிதா என பெயர் சூட்டினார்.
இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு பத்மினி என பெயர் சூட்டினர். அவள்தான் நம் நாயகி.
அடுத்து பிறந்த பெண் குழந்தை ராகினி. மூவரையும் செல்லமாக லல்லி, பப்பி, ராகி ( லலிதா பத்மினி ராகினி) எனத் தம்பதியினர் அன்போடு அழைப்பார்கள்.
சிறுவயதில் லலிதாவும் ராகினியும் பாட்டுப் போட்டிக்கு சேர்ந்தால் பத்மினி பேச்சு போட்டியில் சேர்ந்து அனல் தெறிக்கப் பேசுவாள். பத்மினி கராத்தே பயிற்சிக்குச் சேர்ந்தாள். அவளின் அக்காவும் தங்கையும் நடன வகுப்பில் சேர்ந்தனர்.
“பேர் தான் நாரதர் திரிலோக சஞ்சாரி . . . ஆனா வீட்ல என்ன நடக்குதுனு தெரியில” என தன் மனைவியின் புலம்பலைக் கண்டும் காணாமல் நாரதர் தன் மகள்களை “என்ன?” என ஜாடை செய்ய
மூன்று பெண்களும் சிரித்தனர்.
“அங்க என்ன பேச்சு?” என தன் கணவரை அலமேலு இடையில் கைவைத்தபடி முறைத்தார்.
“பப்பி கராத்தே கிளாஸ்ல சேர்ந்திருக்கா” என முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
“வெரி குட் . . லல்லி ராகி நீங்களும் கராத்தே கிளாசில சேருங்களேன்” என அவர் சொன்னதுதான் தாமதம்
“அப்பா யூ ஆர் சோ ஸ்வீட் . . . லவ் யூ அப்பா . . . தேங்க்யூ” என மூன்று பெண்களும் தந்தையை கட்டி அணைத்தனர்.
அவரும் தன் செல்வங்களின் பாச மழையில் நனைந்து நெகிழ்ந்தார்.
“அலமு பொண்ணுங்களுக்கு இந்த காலத்துல டான்ஸ்விட கராத்தே தான் முக்கியமா