எதையே நோண்டிக் கொண்டு இருந்தான்.
இதைப் பார்த்து ஏமாற்றமடைந்த கோதாவரி “என்னங்க இவ்வளவு நேரமா கத்தினது வேஸ்டா?”
“அட சில சமயங்கள்ல பிளாப் ஆகும். அதுக்கெல்லாம் சோர்வாகலாமா?” என்றவர்
சத்தமாக தன் பாணியில் மீண்டும் தொடங்கினார் “கோதாவரி . . . நம்ம பொண்ணு ரம்யாவை பொண்ணு பாக்க வரேனு சொல்லிட்டு அந்த தஞ்சாவூர் எம்.சீ.ஏ பையன் குடும்பம் வரவே இல்ல . . . நியாபகம் இருக்க?”
“இருக்குங்க” எசைப்பாட்டு
“அது ரம்யாக்கும் நமக்கும் ஏமாற்றமா இருந்திச்சா இல்லையா?”
“ஆமாங்க”
“இப்போ இந்த பொண்ணு நமக்காக அலங்காரம்லாம் செய்துகிட்டு காத்திருக்கும். நாம போகலைனா எப்படி பீல் பண்ணும்.”
“பெண் பாவம் பொல்லாதது” என்று பேசி பேசியே அவன் மனதை கரைத்துவிட்டார்.
“அப்பா எத்தனை மணிக்கு பொண்ணு பாக்க போகணும்” என ஒரு கேள்வியைக் கேட்டு தன் பெற்றோரை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினான் ராகவன்.
“நாளைக்கு காலைல பத்து மணிக்கு” விசு முந்திக் கொண்டார். பின்பு வரதுவுக்கும். பெண் வீட்டிற்கும் தங்கள் வரவை பற்றிச் சொன்னார்.
தன் பெற்றோர்கள் நடிப்பு ராகவனுக்குப் புரியாமல் இல்லை.
நேரிடையாக பெண்ணிடமே விஷயத்தைக் கூறிவிட வேண்டும். இதோடு இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கிளம்பினான். ஆனால் இது முற்றுப்புள்ளி அல்ல கமா என அவனுக்குத் தெரியவில்லை.
வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நடக்கக் கூடாது என எண்ணுவார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட நிகழ்வு நடந்தே தீரும். ராகவன் பத்மினி இருவரின் வாழ்க்கைக்கு இது மிகச் சரியாக பொருந்தும்.
அவர்கள் மறுநாள் பெண் பார்க்க வருவார்கள் . நாம் அதற்குள் நாயகி வீட்டிற்குள் செல்வோம் வாருங்கள்.
பத்மினியின் தந்தை நாராயணன் ஆனால் நாரதர் என்று சொன்னால்தான் அவரை தெரியும். அவர் தமிழ் மாத பத்திரிக்கை
ஆசிரியராக (எடிட்டர்) பணியாற்றுகிறார்.
அந்த பத்திரிக்கையின் சிறப்பே கேள்வி பதில் பகுதி ஆகும். அதில் வாசகர் கேள்விகளுக்கு இவர்தான் பதில் வழங்குவார். அதனால் புனை பெயராக நாரதர் என்று வைத்துக்