தொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 04 - சுபஸ்ரீ
விசு ராஜ்கிரண் பாணியில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தலையில் துண்டை முண்டாசு போல கட்டியிருந்தார். சமையலறையில் “சங்கடமான சமையலைவிட்டு சங்கீதம் பாடப் போறேன்” எனப் பழைய காலத்துப் பாடலை பாடிக் கொண்டே மும்முரமாய் சமைத்துக் கொண்டிருந்தார்.
விசு ஓய்வு பெற்றதிலிருந்து அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தார். கோதாவரி எத்தனை சொல்லியும் அவர் கேட்பதாய் இல்லை. யூடியூப் பார்த்து விதம்விதமாக சமைப்பார். சில நாட்கள் சமையலில் உப்பும் காரமும் தங்கத்தின் விலை போல ஏறி இறங்கும்.
“என்னங்க இதெல்லாம் நான் செய்ய மாட்டேனா?” கோதாவரி கேட்டும்
“ம்கூம் . . . இனி வாரத்துக்கு மூணு நாள் நான்தான் சமைப்பேன் . . . இதுவே என் கட்டளை . . கட்டளையே சாசனம் . . . ”என்று சொல்லிவிட்டார். கட்டளையை மீற முடியுமா? . . . கோதாவரியும் கட்டளையை சிரமேற்க் கொண்டார்.
மல்லி தழைகளைக் கொதிக்கும் சாம்பாரில் தூவி அதன் வாசத்தை நுகர்ந்து அனுபவித்து “அருமை . . அருமை விசு” எனத் தன்னையே பாராட்டிக் கொண்டார். பின்பு அதை டைனிங் டேபிளில் கொண்டு வைத்து “சாப்பாடு ரெடி . . . வரலாம்” என அழைத்தார்.
ராகவனும் கோதாவரியும் வந்தமர்ந்தனர். சாம்பார் ரசம் பொரியல் என அமர்களபடுத்தியிருந்தார் விசு ( அவர்வரையில் இது பெரிய விஷயங்க).
ராகவனும் கோதாவரியும் சாப்பிட்டுவிட்டு பிரமாதம் ஆஹா சூப்பர் எனப் புகழ்ந்தனர்.
இந்த பாராட்டுகளைப் பார்த்ததுமே சமையலில் ஏதோ சரியில்லை