தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 19 - முகில் தினகரன்
சில அலுவலக கடிதங்களை கூரியர் சர்வீஸில் கொடுத்து விட்டு, வெளியே வந்த முரளியை வாசலிலேயே நிறுத்திய அந்தப் பெண். “என்ன கோகுல் சார் சௌக்கியமா” கேட்டாள்.
அவள் தன்னை கோகுல் என்று நினைத்துப் பேசுகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட முரளி, அந்த உண்மையைச் சொல்ல வாயெடுக்க,
அவன் எதிர்பார்க்காத வினாடியில், சட்டென்று குனிந்து அவன் காலைத் தொட்டு வணங்கினாள் அந்தப் பெண்.
அதிர்ச்சியோடு ஓரடி பின்னால் நகர்ந்த முரளி, “என்னம்மா இதெல்லாம்?” என்று கேட்க,
“சார்...நீங்க மட்டும் அன்னிக்கு சரியான சமயத்துல வந்து பணம் கொடுத்து உதவலேன்னா...நான் அசிங்கப்பட்டு....அவமானப்பட்டு...தற்கொலையே பண்ணியிருப்பேன் சார்” என்றாள்.
இந்த பின் புலத்தில் ஏதோ கதை உள்ளது, என்பதைப் புரிந்து கொண்ட முரளி, “அதனாலென்னம்மா?” என்று சொல்ல,
சட்டென்று தன் கைப்பையைத் திறந்து, அதனுள்ளிருந்து பணத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். “என்னிக்காவது ஒரு நாள் நிச்சயம் உங்களைப் பார்ப்பேன் அப்போது இந்தப் பணத்தைக் கண்டிப்பா திருப்பிக் குடுக்கணும்!னு வெச்சிருந்தேன்.....இன்னிக்குத்தான் நீங்க என் கண்ணில் பட்டீங்க”
அதை முரளி வாங்க மறுக்க, “சார்...ப்ளீஸ் வாங்கிக்கங்க சார்” கெஞ்சலாய்ச் சொன்னாள் அவள்.
“அம்மா...இதை வாங்கறதுக்கு முன்னாடி நான் ஒரு உண்மையைச் சொல்றேன்...அதை முழுவதும் கேளு...அப்புறமா இதை குடுப்பதா?...வேண்டாமா?ன்னு முடிவு பண்ணு”” என்று பீடிகை போட்ட முரளி, “நான் கோகுல் இல்லை” என்றான்.
“என்னது?...கோகுல் இல்லையா?” அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டு, “இல்லை...நீங்க பொய்