“ஒருவேளை...நான் இதை எடுத்துக்கிட்டு....ஓடிட்டா?” முரளி வேண்டுமென்றே கேட்க,
“ஒருவேளை...அந்தப் பணம் உனக்கானது போலிருக்கு...அதனால்தான் உன் கைக்கே போயிடுச்சு”ன்னு நெனச்சுக்கிட்டு நிம்மதியாயிடுவேன்” என்றார் சிங்கமுத்து.
கையெடுத்துக் கும்பிட்ட முரளி, “அய்யா...நீங்க மாமனிதர்” என்று சொல்லியபடியே, சூட்கேஸை வாங்கிக் கொண்டான்.
“இல்லை தம்பி...நான் மாமனிதன் இல்லை நீதான் மாமனிதன்!...நேற்றைக்கு அந்தப் பெண் உன்னை கோகுல்ன்னு நெனச்சு உன் கிட்ட பணம் கொடுக்க வந்தப்ப...நீ சத்தமில்லாமல் அதை வாங்கி வைத்துக் கொண்டிருக்கலாம்!...ஆனா அதை செய்யலை!...மாறா...அவளை என்கிட்டே கூட்டிட்டு வந்து அந்தப் பணத்தை என் கையில் கொடுக்க வெச்சே பாரு?...அப்பவே உன்னோட நேர்மையை நான் படிச்சிட்டேன்!...அதுக்கு மேலேயின் உன் மேல் எனக்கு நம்பிக்கை வரலைன்னா....நான் மனுஷனே இல்லை”
முரளி இமை கொட்டாமல் அவரையே பார்த்தபடி நிற்க, “வெளிய...கிளார்க் மணி இருப்பான்...அவன் கிட்டே அக்கௌண்ட் டீட்டெய்ல்ஸ் வாங்கிக்கோ” என்றார்.
தொடரும்