ஏற்பாடு பண்ணிட்டு வந்து கட்டறேன்!”னு சொன்னேன்!...அவர் என்னை வெளிய விட மாட்டேனுட்டார்!...போன்ல பேசி ஏற்பாடு பண்ணு!ன்னு சொன்னார்!...நானும் முயற்சி பண்ணினேன்...எங்கேயும் கிடைக்கலை!...நான் பணம் கட்டலைன்னா...போலீஸ்ல என் மேலேயே கம்ப்ளைண்ட் குடுக்கப் போறதா மொதலாளி சொல்ல...துடிச்சுப் போனேன்!...அப்பத்தான் கோகுல் வந்தார்”
“ஓ...வந்து?”
“ஏதோ கிப்ட் வாங்க வந்தவர்..அங்க நடந்திட்டிருந்த பிரச்சினையைக் கூர்ந்து கவனிச்சார்!...என் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து..எனக்காக முதலாளி கிட்டே பேசினார்!...அவர் ரொம்ப முரண்டு பிடிக்க...தான் நகை வாங்க கொண்டு வந்த அந்தப் பணத்தைக் கொடுத்து என்னை அங்கிருந்து மீட்டுட்டு...என் நன்றியைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல்...அவர் பாட்டுக்குப் போயிட்டார்!...அப்போதிருந்து நான் அவரைத் தேடிட்டிருக்கேன்!...”
இறந்து போன கோகுலின் நல்ல மனதை எண்ணி உள்ளுக்குள் பெருமிதப்பட்ட முரளி, “அம்மா....இந்தப் பணத்தை நீங்கள் கண்டிப்பா திருப்பிக் கொடுக்க நினைத்தால் ஒன்று செய்யலாம்!...நான் உங்களை கோகுலோட அப்பா கிட்டே கூட்டிட்டுப் போறேன்!...அவர் கிட்டேயே நீங்க குடுத்திடுங்க!...என்ன சொல்றீங்க?” கேட்டான்.
“ம்ம்ம்...கரெக்ட்...அதுதான் நல்ல வழி!...”என்றாள் அவள்.
இருவரும் ஒரு ஆட்டோ பிடித்து டிரான்ஸ்போர்ட் ஆபீஸிற்கு வந்தனர்.
தன் அறைக்குள் ஒரு பெண்ணுடன் முரளி வருவதை வினோதமாகப் பார்த்தார் சிங்கமுத்து.
“சார்...இந்தப் பொண்ணு பேரு நித்யா!...இவங்க உங்க கிட்ட ஏதோ சொல்லணுமாம்” என்று ஆரம்பித்து வைத்தான் முரளி.
தொடர்ந்து அப்பெண், கோகுல் தனக்குச் செய்த உதவியை, அதன் மூலம் தன் மானம், மரியாதை, கௌரவம் எல்லாம் காப்பாற்றப்பட்ட விபரங்களை அவரிடம் விவரித்துக் சொல்ல,