Page 14 of 28
இளமதிக்கு ஏக கொண்டாட்டம் சட்டென கவலையை மறந்து நந்தாவை பிடித்துக் கொள்ள அவனுக்கு இச்சமயம் கோபம் வரவில்லை, மாறாக சிரித்தபடியே அவளை விட்டு நாசுக்காக விலகி
”வேணாம்” என மென்மையாக சொல்லி தலையாட்ட அவளோ முடியாது என்பது போல் தலையாட்டி புன்னகைக்க அந்த சிரிப்பில் தன்னை மறந்தவன் எங்கே தனது மனதை அவளிடம் இழந்துவிடுவோமோ என பயந்து பாட்டியிடம் சென்றான்
...
This story is now available on Chillzee KiMo.
...
மதியிடம்
”ஏன்மா உன் முகம் சோகமாக இருக்கு என்னாச்சி” என விசாரிக்க நந்தா பயந்தான் பதட்டமானான் ஆனால் இளமதியோ
”ஒண்ணுமில்லை பாட்டி பசிக்குது” என்றாள்