(Reading time: 6 - 11 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

  

அதைக் கேட்டு அதிகமாகவே கூசினான் அவன்.

  

“சரி...கிளம்பு...நானே உன்னைக் கொண்டு போய் உன் வீட்டில் விட்டுடறேன்” என்று சொல்லி விட்டு சொக்கு எழ,

  

வசந்தியும் எழுந்தாள்.

  

போலீஸ் ஸ்டேஷன் செல்லுவதற்காக வாசலுக்கு வந்த முரளி, தன் வீட்டு வாசலில் வந்து நின்ற சொக்குவையும், அவன் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த வசந்தியையும் பார்த்து குழப்பமானான்.

  

“வசந்தி எப்படி...இவன் கூட?”

  

அதற்குள் அக்கம்பக்கத்தினர் கூடி விட, ராக்கம்மா கத்தினாள், “அடியேய் கூறு கெட்டவளே!...எங்கேடி போயிட்டு...வர்றே?...வயசுப் பொண்ணு ஒரு ராத்திரி முழுசும் வீட்டுக்கு வரலேன்னா அதுக்குப் பேரு என்ன தெரியுமாடி?”

  

தாயை அடக்கினான் முரளி.

  

“முரளி...இப்பத்தான் புரியுது!....நேத்திக்கு ராத்திரி அந்த ரெண்டு பேரையும் அடிச்சுப் போட்டுட்டு உன் தங்கச்சியைத் தூக்கிட்டுப் போனது இந்தச் சொக்குதான்” என்றான் கூட்டத்திலிருந்து ஒருத்தன்.

  

அவனைப் பார்த்துக் கையமர்த்திய முரளி, “சொக்கு...என்னப்பா இதெல்லாம்?” நிதானமாய்க் கேட்டான்.

  

“அண்ணா...அதை நான் சொல்றேன்” என்ற வசந்தி, கடைவீதியிலிருந்து தான் இருட்டு நேரத்தில் குறுக்கு வழியே வந்ததையும், அங்கே இரண்டு குடிகாரர்கள் தன்னிடம் வந்து வம்பு செய்த்தையும், அப்போது இந்தச் சொக்குதான் வந்து அவர்களை அடித்துப் போட்டு விட்டு

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.