(Reading time: 6 - 11 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 31 - முகில் தினகரன்

ந்த லாரியை அடையாளம் கண்டுபிடித்து விட்ட முரளி, “அடடே...நம்ம தங்கவேலண்ணன் லாரியாச்சே?” சொல்லிக் கொண்டே லாரியை நோக்கி ஓடினான்.

  

அதிலிருந்து குதித்திறங்கிய தங்கவேலு, “என்னப்பா சௌக்கியமா?” கேட்டார்.

  

“எல்லாம் நல்ல சௌக்கியம்...நீங்க எப்படி இருக்கீங்க?”

  

“ம்..நல்லா இருக்கேன்” என்றவர், “என்ன இந்த சொக்கு இங்க நிற்கிறான்?...மறுபடியும் ஏதாச்சும் பிரச்சினையா?” சன்னக் குரலில் கேட்க,

  

“அண்ணே..இங்க எல்லாம் மாறிப் போச்சண்ணே?...சொக்கு இப்ப நம்ம ஆளு...நல்ல ஆளு!...” என்றான் முரளி.

  

“அடடே பரவாயில்லையே?” என்றபடி சொக்குவின் அருகில் வந்து அவன் தோள் மீது கை போட்டார் தங்கவேலு.

  

“அண்ணே...இன்னொரு சந்தோஷமான விஷயம்!...சொக்குவுக்கு கல்யாணம்...பொண்ணு யாரு தெரியுமா?” முரளி கேட்க,

  

“யாரு?”

  

“நம்ம வசந்திதான்” என்று முரளி சொல்ல, கழுத்தை திருப்பி வசந்தியைப் பார்த்த தங்கவேலு, “என்னம்மா நிஜமா?” கேட்டார்.

  

அவள் வெட்கத்துடன் தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

  

“எப்பக் கல்யாணம்?” தங்கவேலு கேட்டார்.

  

“ம்ம்ம்...வர்ற ஞாயிற்றுக் கிழமை முகூர்த்தம்!” என்று முரளி சொல்ல,

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.