“அப்ப ஒண்ணு செய்வோம்...அதே முகூர்த்தத்துல ரெண்டு கல்யாணத்தையும் நடத்திடுவோம்!” என்றார் தங்கவேலு.
“ரெண்டு கல்யாணத்தையா?...அண்ணே...என்ன சொல்றீங்கண்ணே?...இன்னொரு கல்யாணம் யாருக்கு?” புரியாமல் கேட்டான் முரளி.
“உனக்குத்தான்”
“எனக்கா?...என்னண்ணே தமாஷ் பண்றீங்களா?...இன்னும் பொண்ணே பார்க்க ஆரம்பிக்கலை...அதுக்குள்ளார நீங்க கல்யாணம் வரைக்கும் போயிட்டீங்க” என்றான் முரளி.
“பொண்ணு நீ பார்க்கலை...ஆனா பொண்ணு உன்னைப் பார்த்திடுச்சு” சொல்லி விட்டு தங்கவேலு குறுஞ்சிரிப்பு சிரிக்க,
“ம்ஹ்ஹும்...சுததமா புரியலைண்ணே”
“இப்ப புரியும் பாரு” என்றவாறே லாரியருகே சென்று அதன் கதவைத் திறந்தார் தங்கவேலு.
உள்ளேயிருந்து நிதானமாய் இறங்கினாள் நித்யா.
அவளைப் பார்த்ததும் விழிகளை விரித்தான் முரளி. “இந்தப் பொண்ணு எப்ப்டி இவரு கூட?” அவன் மூளை வேகமாய் சிந்தித்தது.
லாரியிலிருந்து இறங்கிய அந்தப் பெண்ணை அங்கிருந்தோர்க்கு அறிமுகப்படுத்தினார் தங்கவேலு. “இந்தப் பொண்ணுதான் முரளிக்கு நான் பார்த்திருக்கற பொண்ணு”
தங்கவேலுவை நெருங்கி வந்த முரளி, “அண்ணே...என்ன?ண்ணே திடீர்னு இந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வந்து நிக்கறீங்க...அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம்!னு வேற சொல்றீங்க...எனக்கு ஒண்ணுமே புரியலை” என்றான்.