Page 1 of 36
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 10 - சசிரேகா
மறுநாள் விடிகாலையில் வானமே பிளந்துவிடும் அளவு பயங்கரமான இடி சத்தம் முழங்க நல்ல உறக்கத்தில் இருந்த ஸ்ரீவர்தினி பதறிக் கொண்டு எழுந்தாள்.
”என்ன இது, இப்படி இடி இடிக்குது, ஒருவேளை மழை பெய்யுதா” என புலம்பியபடியே வேர்க்க விறுவிறுக்க அறையை விட்டு வெளியேறி வீட்டு வாசக்கதவை திறக்க ஜோவென மழை பொழிய கூடவே பயங்கர காற்று சுழற்றியடித்துக் கொண்டிருந்தது. அவள் பார்க்கும் போதே வெளியே ரோடெல்லாம் வெள்ளம் போல தண்ணீர் சென்றுக் கொண்டிருக்கவே அவசரமாக கதவை சாத்திவிட்டு டிவி ஆன் செய்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
an>கௌசி எழு கௌசி” என கௌசியை உலுக்க அவளோ
”என்னக்கா” என தூக்க கலக்கத்தில் பேச
“வெளிய பாரு ஒரே மழை”