முத்துக்குமாரின் கண்கள் கலங்கி இருந்தது! முகத்தில் துக்கம் மேலோங்கி இருந்தது.
உண்மையாக வருந்தும் கணவன்?
“கேளுங்க சார், எவ்வளவு கேள்விக்கு வேணா பதில் சொல்றேன். என் இந்துவை இப்படி ஆக்கினது யாருன்னு கண்டுபிடிங்க சார். ப்ளீஸ் சார்."
அதை சொல்லும் போதே முத்துக்குமாரின் கண்களில் இருந்து நீர் கொட்டியது!
"உங்க இழப்புக்கு வருந்துறேன் மிஸ்டர் முத்துக்குமார். இப்போ கொஞ்சம் ஹை லெவல் டீடெயில்ஸ் மட்டும் கொடுங்க போதும், மத்த விஷயம் எல்லாம மெதுவா..." என்ற தென்றல்வாணனின் பேச்சை இடையில் நிறுத்தி,
"இல்லை இன்ஸ்பெக்டர்! என்னை பத்தி கவலைப் படாதீங்க, வேண்டிய கேள்விகளை கேளுங்க," என்றான் முத்துக்குமார்.
"இன்னைக்கு விடி காலையில் இருந்து நடந்ததை எல்லாம் உங்களுக்கு தெரிந்த வரை சரியான நேரத்தோட சொல்லுங்க."
"சொல்றேன் சார்... காலையிலே ஜாகிங் போவது என்னோட தினசரி வழக்கம். இன்னைக்கும் விடிகாலையிலேயே ஜாகிங் கிளம்பினேன்."
"நீங்க கிளம்பினப் போது எத்தனை மணி இருக்கும்?"
"ஆறு பத்து கிட்ட இருக்கும், இன்ஸ்பெக்டர்."
"ஓகே! நீங்க வீட்டில இருந்து கிளம்பினப்போ உங்க வைஃப் எப்படி இருந்தாங்க?"
"எப்போதும் போல நார்மலா இருந்தாள்."