(Reading time: 8 - 15 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

“எவ்வளவு திமிருடா உனக்கு! போனா போகுதுன்னு உன்னை என்னோட சேர்த்துக்கிட்டதுக்கு நீ தான் எல்லாமே செய்ற மாதிரி பேசுற?” காஷ்யாப் மிகவும் கோபப்பட்டான்.

  

ஆதித்யா அதற்காக அமைதியாகி விடவில்லை.

  

“நான் உண்மையை தானே சொல்றேன் காஷ்யாப். இங்கே கோட் எழுதுறதுல இருந்து, டீபக்,  டிப்லாய் எல்லாம் செய்றது யாரு? நான் தானே. ப்ளீஸ் காஷ்யாப், நான் உன்னை நம்பி இருக்குறவன், ஏமாத்திடாதே!”

  

“இனிமேல் நீ என்னை நம்பி இருக்க வேண்டாம். நீ தனியா வேற ரூட்ல போ, நான் வேற ரூட்ல போறேன். இந்த ஸ்டார்ட் அப், ப்ராடக்ட் எல்லாம் நானே பார்த்துக்குறேன். நீ உன்னுடைய அபரிதமான அறிவை வச்சு வேற ஏதாவது செய்.”

  

“காஷ்யாப்!” ஆதித்யா திகைத்துப் போய் என்ன பேசுவது என்றே புரியாமல் நின்றான்.

  

“கெட் அவுட் ஆதி. இதுக்கு மேல நீ இங்கே வர வேண்டாம்!”

  

திடீரென்று காஷ்யாப் இப்படி மாறிப் போயிருப்பது ஆதித்யாவிற்கு பேரதிர்ச்சியை கொடுத்திருந்தது. உயிருக்கு உயிரான நண்பன் என்று நினைத்திருந்தவன் எதற்கு இப்படி செய்கிறான்?

  

“ஆதி, சீக்கிரம் கிளம்பு! வாட்ச்மேனை கூப்பிட்டு கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுற மாதிரி விட்டுட மாட்டேன்னு நம்புறேன்!”

  

காஷ்யாப் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் அவனின் மொபைலில் அழைப்பு வந்தது.

  

“ஹலோ, ஹலோ ஸ்ரீகர்! நான் எல்லா அரேஞ்ச்மேன்ட்ஸும் செஞ்சுட்டு இருக்கேன்,” என காஷ்யாப் போனில் பேசுவது ஆதித்யாவிற்கும் கேட்டது.

  

எதனால் காஷ்யாப் மாறிப் போய் விட்டான் என்பதை ஆதித்யாவால் உடனே புரிந்துக் கொள்ள

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.