நேரடியாக சொல்லாவிட்டாலும் அவனும் மதியூரில் அமைதி இருக்கும் என்று நம்பி தான் வந்திருந்தான்.
அவனுக்காக தன் குடும்பத்தையே எதிர்த்து நின்றவள் சத்யா. அவர்களின் திருமணத்தில் சத்யாவின் பெற்றோருக்கு இன்று வரைக்கும் திருப்தி இல்லை. தன்னை முழுவதுமாக நம்பி வந்திருக்கும் மனைவியை நல்ல விதமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தேன் விரும்பினான்.
அவன் ஒரு சின்சியர் போலீஸ் அதிகாரி என்பதால் அவனுக்கு பல திசைகளில் எதிரிகள் இருந்தார்கள். அது எந்த விதத்திலும் தன் குடும்பத்தை பாதித்து விடக் கூடாது என்பதற்காக தான் சுற்றுலா தளமாகவும், அமைதியான மாவட்டமாகவும் இருந்த மதியூரை குறிப்பாக தேர்ந்தெடுத்து மாற்றல் வாங்கி இருந்தான்!
இங்கே இப்படி வீட்டில் புகுந்து கொலை, கொள்ளை என்றால் என்ன சொல்வது?
இறந்துப் போயிருந்த இந்திராவின் முகத்தில் இருந்த பயம் கலந்த உறைந்துப் போன பார்வை அவனுக்கு எதையோ சொல்வதாக தோன்றியது!
மனைவியை மறந்து தன் வேலையை தொடர முத்துகுமாரின் பெற்றோரை நோக்கி சென்றான்.
**************
"உங்க மருமகளை பத்தி சொல்லுங்க மிஸ்டர் ரமணி," என முத்துக்குமாரின் தந்தை ரமணியை கூர்மையாக கவனித்துக் கொண்டே கேட்டான் தென்றல்வாணன்.
"நாங்க சொல்ல எதுவுமில்லை, இன்ஸ்பெக்டர்! அவங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருந்தாங்க. எங்களுக்கு அதுவே போதும்ன்னு நாங்க ஒதுங்கி இருந்தோம்," என்றார் ரமணி!
இவரின் பேச்சில் கசப்பு இருக்கிறதோ?
"உங்களுக்கு ஒரே ஒரு மகன் மட்டும் தானா?"
தென்றல்வாணனுக்கு எதிரே, ரமணியின் அருகே அமர்ந்திருந்த முத்துக்குமாரின் அம்மா