“உங்களுக்காக வெயிட் செய்துட்டு இருக்காங்க, சார்.”
“அவங்களை வரச் சொல்லுங்க!”
சில வினாடிகளில் அபினவ்வை தொடர்ந்து ஒரு பெண்மணி அங்கே வந்தாள். அவள் கட்டி இருந்த சேலையின் நிறம் மங்கி இருந்தது ஆனால் நேர்த்தியாக அதை அணிந்திருந்தாள்.
அவளின் கண்களின் பயமும், சோகமும் தெரிந்தது.
“நீ முத்துக்குமார் வீட்டுல வேலை செய்றீயா? உன் பேரு என்ன?”
“ஆமா சார்! பேரு காந்தா!” என்றவளின் குரலிலும் பயம் தெரிந்தது.
“எதுக்கு இப்படி பயப்படுற?”
“எனக்கு போலீஸ்னா பயம் சார்.”
“ஏன் தப்பு ஏதாவது செய்திருக்கீயா என்ன?”
“ஐயையோ நான் அப்படி எதுவும் செய்ய மாட்டேன் சார். என் மொத்த குடும்பமே என்னை நம்பி இருக்கு!”
“சரி, சரி, இறந்துப் போன இந்திராவைப் பத்தி சொல்லு. அவங்க எந்த மாதிரி டைப்?”
“சரியான சிடு சிடு டைப் சார். சம்பளம் எல்லாம் சரியா கொடுத்திருவாங்க. அப்பப்போ சாப்பாடு கூட தருவாங்க. ஆனால் எப்போ பாரு குறை கண்டுப்பிடிச்சுட்டே இருப்பாங்க. எவ்வளவு வேலை செய்தாலும் அவங்களை திருப்தி படுத்தவே முடியாது.”
“அப்படியா! இந்திரா முத்துக்குமார் கிட்டேயும் அப்படி தான் இருப்பாங்களா?”