தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 07 - தேன்மொழி
விசாரணை கோப்புகள் - 01 - குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...!
தென்றல்வாணனின் குரலில் குற்றம் சாட்டும் தோரணையோ, கோபமோ சிறிதும் இல்லை! அமைதியாக தான் அந்த கேள்வியைக் கேட்டான்.
ஆனால் முத்துக்குமாரின் முகத்தில் வேர்வை துளிகள் அரும்பி இருந்தது!
"நீங்க யாரும் சொல்லாமல் விட்டால் என்ன, இன்ஸ்பெக்டர்? நான் அதெல்லாம் அந்த ரூமில பார்த்தேன்..."
"எந்த ரூமில, எங்கே பார்த்தீங்க?"
"ஹால்ல இருந்த ப்ளூ சேர் பக்கத்துல பார்த்தேன்..."
"யூ நோ வாட் மிஸ்டர் முத்துக்குமார், நீங்க சொன்ன அந்த சேர் பக்கத்தில தான் இந்த சிகரட் பாக்ஸ் இருந்தது... ஆனால் உங்க மனைவி இறந்திருந்த இடத்தில் இருந்து நேரா பார்த்தால் அது எதுவும் தெரியாது. எதையாவது தேடினால் மட்டுமே தெரியும்... ஏன்னா அது சேருக்கு பின்னால மறைஞ்சு இருந்தது... அப்படி தான் நாங்க கண்டுபிடிச்சோம்... காதலிச்சு நீங்க கல்யாணம் செய்துக்கிட்ட உங்க உயிரினும் மேலான மனைவி இறந்து போனதை தெரிந்துக் கொண்ட நிலைமையில் நீங்க அப்படி எதுவும் தேடி இருக்க வாய்ப்பில்லை..." என்று சொல்லி பேச்சை நிறுத்திய தேன், கூர்மையான பார்வை ஒன்றை முத்துக்குமார் பக்கம் வீசியப்படி,
"நீங்க தான் அதை அங்கே வைத்தவர் என்றால் மட்டுமே அது உங்களுக்கு இத்தனை தெளிவா தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு!" என்றான்.
"முத்து, நீ எதுவும் பேசாதே! நம்ம வக்கீலை கூப்பிடலாம்..." என்று ரமணி மகனை மறைமுகமாக எச்சரித்தார்.
ரமணியின் பேச்சை சட்டை செய்யாமல், முத்துக்குமாரை தன் விழிகளால் துளைத்தபடி,
"என்னால புரிஞ்சுக்க முடியுது மிஸ்டர் முத்துக்குமார்... உங்களுக்கு உங்க மனைவி மீது காதல் என்றால், அம்மா அப்பா, தங்கை மேல பாசமும் இருக்கு! ஆனால் உங்க மனைவி அப்படி