கிரேடியன்ட் நிற சேலை அணிந்திருந்தாள். எளிமையாக தான் இருந்தாள். எனினும் விவேக்கிற்கு எப்போதும் விட அதிக அழகுடன் தெரிந்தாள்.
விவேக் பார்த்துக் கொண்டிருக்க, ஹரிணியுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த சான்வி, விவேக் ஹரிணி பக்கத்தில் நிற்பதை கவனித்து மரியாதைக்காக புன்னகை புரிந்தாள்.
விவேக்கிற்கு ரோலர் கோஸ்டரில் செல்வதுப் போல் ஜிவ்வென்ற உணர்வு ஏற்பட்டது.
“எப்படி இருக்கீங்க சான்வி? உங்க தம்பி எங்க வீட்டுல பத்திரமா இருக்கான்!” ஏதாவது பேச வேண்டுமே என அப்போது தோன்றியதை பேசினான் விவேக்.
“உங்க எல்லோருடைய உதவிக்கும் ரொம்ப நன்றி. நாளைக்கு ஆதிக்கு பர்ஸ்ட் ரவுன்ட் இருக்கு. அதுக்கு எல்லாம் தயார் செய்துட்டானான்னு கேட்கலாம்னு நினைச்சேன்.”
“ஆதி கிட்ட போனை கொடுக்குறேன், இருங்க.”
“இல்லை இல்லை, அப்படி சொல்லலை. நான் எதுக்கு கூப்பிட்டேன்னு சொல்றேன்!”
சான்வி மறுத்து பேச தலையை ஆட்டிய நேரத்தில் அவளின் கம்மல்களும் அதே மாதிரி ஆடி விவேக்கின் இதயத்தை ஸ்லிப் ஆக வைத்தது!
சான்வி பற்றி மற்றவர்கள் சொல்லி கேள்வி பட்டிருக்கிறான், அவனே இரண்டு மூன்று தடவைகள் பேசி இருக்கிறான், ஆனாலும் அவளுடன் பல ஜென்ம தொடர்பு இருபதாக ஒரு உணர்வு அவனுக்குள் ஏற்பட்டு இருந்தது.
“ஆதி சின்சியரா ப்ரிப்பேர் செய்றான். கட்டாயம் இந்நேரம் ரெடியா இருப்பான். அவனுக்கு தேவையான எல்லா உதவியையும் நான் செய்றேன். நீங்க எந்த கவலையும் படாதீங்க! சரிங்க, அம்மா கிட்ட நீங்க பேசுங்க,” என மனசே இல்லாமல் மீண்டும் தன் நாற்காலிக்கு திரும்பி வந்து அமர்ந்தான் விவேக்.
ஹரிணி ஆதியிடம் போனைக் கொடுக்காது அடுத்து நித்தினை சான்விக்கு அறிமுகம் செய்து