தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 12 - யாஷ்
டெக் க்ளோபல் காம்படிஷனின் முதல் ரவுன்டில் ஒவ்வொரு டீமின் பிஸ்னஸ் அக்யூமன் எனப்படும் வியாபார நுணுக்கத் திறமையை சோதிக்கும் வினாடி-வினா இருந்தது. டீம் அக்ஷயா சார்பாக ஆதியும், அக்ஷராவும் கலந்துக் கொண்டார்கள்.
அக்ஷரா பயத்தினால் வேர்த்து விறுவிறுத்து போயிருந்தாள். ஆதி அப்படி கலங்கி இருப்பதாக தெரியவில்லை.
நிகழ்ச்சி தொகுப்பாளர் மைக்கில் பேசத் தொடங்கவும் அக்ஷரா, ஆதித்யா இருவருமே அவர் பேச்சை கவனிக்க தொடங்கினார்கள்.
“வெல்கம் டு டெக் க்ளோபல் காம்படிஷன். இந்த முதல் ரவுன்ட்ல நடக்குற க்விஸ் காம்படிஷன் வித்தியாசமானது. இதுக்கு சரியான பதில், தப்பான பதில்ன்னு இல்லை. நாங்க கேட்குற கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்லனும். அதுல இருந்து தெரியும் உங்க தொழில் அதிபருக்கான திறமையை எங்க ஜட்ஜஸ் நோட் செய்து பாயின்ட்ஸ் கொடுப்பாங்க. முதல் இருபது இடத்தை பிடிக்கும் டீம் மட்டும் தான் அடுத்த ரவுன்ட் போக முடியும். உங்க டீம் கிட்ட ஒவ்வொரு ஜட்ஜா வந்து கேள்வி கேட்பாங்க. நீங்க சொல்லும் பதிலை ரெகார்ட் செய்துப்பாங்க. ஆல் த பெஸ்ட் டீம்ஸ். ஏதாவது சந்தேகம் இருந்தா கேட்கலாம்.”
சில பேர் கேள்விகள் கேட்டார்கள். ஆதித்யாவும், அக்ஷராவும் அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“பயமாருக்கு ஆதி!” அக்ஷரா மெதுவாக ஆதியிடம் சொன்னாள்.
“எனக்கும் கூட தான்!” என ஆதி சொல்லவும் அக்ஷராவால் நம்பவே முடியவில்லை.
“பொய் தானே சொல்ற?”
“இல்ல அக்ஷரா, பயமா இருக்கு. அதை வெளிப்படையா காண்பிக்காமல் இருக்கேன்.”
அக்ஷரா ஆதியை உற்றுப் பார்த்தாள். பிறகு டிஷ்யூ பேப்பரால் நெற்றியை நன்றாக துடைத்துக்