(Reading time: 7 - 14 minutes)
Manasa Theevu
Manasa Theevu

"என்றாள்  மானசா.

  

எப்படி ?" என்று கேட்டான்  மாதவன்.

  

"எண்ட அச்சன்கிட்ட அப்படி நடந்தீங்க?" என்று கூறினாள் மானசா.

  

"எப்படி நடந்தேன்?" அவளுடைய தலை முடியை கோதியவாறே அவள் பேசுவதை ரசித்துக்கொண்டே  கேட்டான்.

  

"என்ன எல்லாம் மறந்துபோச்சோ?"

  

"ஹ்ம்ம்... எல்லாம் மறந்து போயி.... நிண்ட கூட இப்படி உக்கார்ந்தா எதுவும் ஞாபகத்தில் வராது எண்ட மானசி" என்று அவளை விழுங்குவது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

  

"சரி நாயர், நம்ம சஹானா கரையறாள், ஞான் போகும்."

  

"அவளை பார்த்துக்க அத்தனை வேலையாள் உண்டு, நீ எங்கயும் போகவேண்டா, இன்னிக்குத்தான் நீ என்னோட ஆத்மார்த்தமா பேசிக் கொண்டிருக்கிறாய், நீ இங்கயே இரு."

  

"எத்தனை வேலையாள் இருந்தாலும், அம்மையை போல வருமா நாயர்? அம்மேதான் குழந்தைகளை கவனிக்கணும்."

  

"இல்ல மானசி நீ இன்னிக்கு பூரா என்னோடத்தான் இருக்கணும், எங்கயும் போகக்கூடாது. "

  

"ஐயோ, என்ன நீங்க? வாங்க குழந்தைகளை பார்க்க போகலாம், நமக்கு ஐஞ்சு குட்டிங்க அதெல்லாம் பார்க்க வேணாமா? அவங்க கூட விளையாட வேணாமா?"

  

அவன் மனசே இல்லாமல் அவள் பின்னாடியே சென்றான். 

  

"எண்ட மோளே... உனக்கு எந்து வேணும்? ஏன் கரையரை? " என்று மானசி  தன் மூத்த குழந்தை சஹானாவை தூக்கிக் கொண்டு கொஞ்சினாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.