தொடர்கதை - மானசா தீவு – 03 - விஜேஜி
வீட்டிற்கு சென்றபோது மாதவன் வந்திருந்தான்...."எப்படியிருக்க?எங்க போயிருந்த?"
"நீங்க எப்படியிருக்கீங்க? உள்ள போய் பேசலாமா?"
அவன் ஆச்சர்யபட்டான். என்ன ஆச்சு இவளுக்கு திடீரென்று, நன்றாக பேசுகிறாளே என்று இருந்தது. எப்போதும் தன்னை நிமிர்ந்துகூட பார்க்க மாட்டாள், இப்போது அவளே வந்து பேசுகிறாளே ? என்று ஆச்சரியப்பட்டான். மந்திரித்து விட்டது போல அவள் பின்னோடு சென்றான்.
உள்ளே சென்றதும் கதவை மூடிவிட்டு, அவனின் தோள் சாய்ந்தாள். " எப்படியிருக்கீங்க மாதவன் நாயர்?" என்று கொஞ்சினாள்.
அவளின் அருகாமையில், கொஞ்சலில்
அவன் தன்னை மறந்தான், இந்த ஒரு நாளுக்காக அவன் தன் மொத்த ஆயுளையும் அடகு வைப்பான். இவள் என்னவள் என்ற பெருமை. அவன், அவளை நிதானமாக, அனு அனுவாக அனுபவித்தான், அவளும் அவனுக்கு தேவையானதை அவன் இஷ்டப்படி அவன் எதிர்பார்த்தபடி தன்னை கொடுத்தாள். அதில் திருப்தி கொண்டான், அவளை ரணப் படுத்தாமல் அனுபவித்தான்...அவளுக்கும் அப்போது புரிந்தது. இதுதான் காரணமென்று.
அவர்கள் தன்னிலைக்கு வந்தார்கள்.
"ஏய்! என்னடீ , என்ன ஆச்சு ஒனக்கு, நீ எப்படி மாறிப்போனாய் ? ”
அவள் வெட்கப் பட்டாள்... "உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் நாயர்."
"அது என்ன மாதவன் நாயர், நாயர்னு என்ன விளிக்கற?"
"ஏன் உங்களுக்கு பிடிக்கலையா? ஆனா எனக்கு பிடிச்சிருக்கு! உங்களுக்கு பிடிக்கலேன்னா