தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 04 - சசிரேகா
மறுநாள் பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி விடிந்தது, கோதைக்கோ விடிகாலையில் புதிரான ஒரு கனவு வந்தது, அவள் பிரசவ வலியில் துடிப்பது போலவும் அழகான குழந்தையை பெற்றெடுப்பது போலவும் வரவே அடித்துப்பிடித்து எழுந்து அமர்ந்து தனது வயிற்றை தொட்டு தடவிப் பார்த்து பின் இது கனவு என தெரிந்ததும் சோர்ந்துப் போனாள்.
”சே கனவா! கனவே இவ்ளோ பயங்கரமா இருக்கே அந்த கனவு மட்டும் பலிச்சா என்னாகிறது அய்யோ கடவுளே” என கோதை ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் ரமணியோ இரவு வெகுநேரமாகியும் உறங்காமல் யோசித்தபடியே பின் தன்னால் உறக்கம் வர உறங்கியதால் அவரால் விரைவாக எழ இயலவில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
ாகுது கண்டிப்பா நீங்க ஹாஸ்பிட்டல்ல இருப்பீங்கன்னு நினைச்சேன்”
”என்னது மணி பத்தா” என அலற கண்ணனுக்கு வேடிக்கையாக இருந்தது
”ஆர் யூ ஆல்ரைட் டாக்டர்”