பவித்ராவின் குடும்பத்தோடு நெருக்கமாகி இருந்தாள்.
"ஏன் பவி, நீ இன்னைக்கு ஃபர்ஸ்ட் இயர் சி செக்ஷனுக்கு மதியம் மேல போன தானே?" என வினவினாள் பாரதி.
"ஆமாம்... லஞ்சுக்கு அப்புறம் ஃபர்ஸ்ட் ஹவர்... நானே கஷ்டப்பட்டு தூங்காம கிளாஸ் நடத்தினால் பாதி பேர் தூங்கி வழியுறாங்க..."
"உன் கூட பேசினாலே எனக்கு தூக்கம் வருது... பின்ன பசங்க என்ன செய்வாங்க, பாவம்..." என்று தோழியை கிண்டல் செய்தாள் பாரதி.
"உனக்கு என்னம்மா, வேலை முடிச்சு ஹாஸ்டலுக்கு போனால் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு, நைட் மெஸ்ல ரெடியா இருக்க டின்னர் வாங்கி சாபிட்டுட்டு நிம்மதியா தூங்கலாம். நான் அப்படியா?"
"அப்புறம்...!!! நீங்க என்ன போய் சமையல் செய்யவா போறீங்க? அங்கே அம்மா ஏற்கனவே எல்லாம் ரெடியா வச்சிருப்பாங்க... இதுக்கு இவ்வளவு அலட்டல்..."
"சமையல் இல்லை பாரு... என்னோட சின்ன வாலு ஒன்னு இருக்கே… ஒரு நிமிஷம் இருக்க விட மாட்டாள்...."
"பின்னே அம்மா ரோல்ன்னா சும்மாவா?"
"அது என்னவோ சரி தான்டீ… ரொம்பவே கஷ்டம் தான்…"
"ஆமாம் சின்ன வாலு நித்திலான்னா பெரிய வாலு யாரு அண்ணாவா? இரு இரு அண்ணா கிட்ட சொல்றேன்...."
"அடிப் பாவி நான் எப்போ இந்த மாதிரி ஏதாவது சொன்னேன்...."
"சொல்லலைனா என்ன? மனசில நினைச்சே தானே??"