பாரதி தோழியிடம் விடைப்பெற்று பேருந்தில் இருந்து இறங்கிச் சென்றாள்.
****************
மறுநாள் காலை, கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி தங்கள் ஸ்டாக ப் ரூம் நோக்கி சென்று கொண்டிருந்த பாரதியையும் பவித்ராவையும்,
"பாரதி மேடம், உங்களை பார்க்க விவேக் சார் வெயிட் பண்ணிட்டு இருக்கார்...." என்ற ஆஃபிஸ் அட்டென்டன்ட் கோபாலின் குரல் தடுத்து நிறுத்தியது.
பாரதியும் பவித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
பத்து வருடங்களுக்கு முன் இந்த கல்லூரியை இந்த கிராமத்தில் கட்ட கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தப் போது, விவசாய நிலங்களில் கல்லூரி கட்டுவதை எதிர்த்து அந்த கிரமத்து மக்கள் சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த ஊரில் பெரிய தொழிலதிபரான நரேந்திரன் தலையிட்டு, பிரச்சனையை தீர்த்து வைத்தார். விவசாய நிலங்களை உபயோகப்படுத்துவது தவறென்ற போதும், இந்த கிரமத்திற்கு மட்டும் அல்லாது, நம் நாட்டிற்கும் பொறியியல் கல்லூரியும் அவசியம் என்பதை உணர்ந்திருந்ததால், நரேந்திரன், கல்லூரிக்கு தன்னுடைய தரிசு நிலங்களை குறைந்த விலைக்கு கொடுத்து விட்டு, விவசாய நிலங்களை மீட்டு விவசாயிகளிடமே கொடுத்தார். இதனால் அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு மட்டும் அல்லாது அந்த கல்லூரி நிர்வாகத்திற்கும் நரேந்திரன் மீது தனி மதிப்பு இருந்தது. அதுவும் நரேந்திரன் பரம்பரை பணக்காரர் அல்ல. ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த அவர், தன்னுடைய அயராத உழைப்பால், இன்று உயர்ந்த நிலையை அடைந்திருந்தார். தமிழகம் முழுவதும் அவருடைய ‘நரேன் டெக்ஸ்டைல்ஸ்’ கிளைகள் பரப்பி சிறந்து விளங்கியது. நரேந்திரனுக்கு மூன்று பிள்ளைகள், இரண்டு மகன்கள், ஒரு மகள். தற்போது முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த மதுமதி அவரின் கடைக்குட்டி மகள். அவரின் இரண்டாம் மகன் தான் விவேக் என அழைக்க படும் விவேகானந்தன்.
மற்ற ஆசிரியர்களின் மூலம் இந்த விஷயங்களை பாரதியும், பவித்ராவும் கேள்வி பட்டிருந்தனர்.