"சரியான தொட்டா சிணுங்கிப் போல...."
"அப்படி இல்லை பாரு, அவ அவங்க வீட்டில கடைசி பொண்ணு இல்லை... அதனால ரொம்ப செல்லமா இருக்கும்..."
"அது என்னவோ... அதுக்காக இப்படியா?"
அதன் பின் இருவரும் மற்ற வகுப்புகள், மாணவிகள், ஆசிரியர்கள் என பேச்சை தொடர்ந்தனர். ஒருவழியாக பேருந்து, பாரதி இறங்கும் நிறுத்தத்திற்கு அருகில் வந்தது.
"சரி பவி... நான் கிளம்புறேன்... நாளைக்கு மறக்காமல் எனக்கு பிடிச்ச எறால் குழம்பு எடுத்துட்டு வா..."
"அடிப் பாவி... இப்படி கேட்டால் எப்படி... நாளைக்கு கஷ்டம்.... நாளை மறுநாள் பார்க்கலாம்..."
"ஹலோ மேடம்!!! நான் ஏற்கனவே அம்மா கிட்ட போன் பண்ணி சொல்லியாச்சு. அவங்க நாளைக்கு உன் கிட்ட கொடுத்து அனுப்புறேன்னு சொன்னாங்க...."
"அத்தை தான் உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து ஸ்பாயில் பண்ணிட்டு இருக்காங்க...."
"ஓஹோ, இப்போ அம்மாவையும் குறை சொல்றீயா? இரு, இரு இந்த சனி கிழமை வந்து உன்னை மாட்டி விடுறேன்..."
"அதை சனிக் கிழமை பார்ப்போம்... இப்போ உன் ஸ்டாப் வந்தாச்சு கிளம்பு...."
"ஓகே... பை டீ..."
"பை...."