(Reading time: 5 - 10 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

பிளைட் டிக்கெட் ஸ்டார்ட் செய்து எல்லாம் புக் செய்து தந்திருக்காங்க. அதை தவிர தினம் தினம் நீ எப்படி இருக்கன்னு விசாரிக்கவும் செய்றாங்க. எனக்கு அப்படி இல்லை. நான் நியூயார்க்ல இருக்கும் போது மட்டும் இல்லை. எப்போதுமே இல்லை. நான் கிளாஸ் அட்டென்ட் செய்றேனா, படிக்குறேனா, சாப்பிடுறேனா, எதுவும் அக்கறை இல்லை. எனக்கு ஏதாவது ஒன்னு நடந்தா கூட என்னை புதைச்ச இடத்துல புல்லு முளைச்ச பிறகு தான் என் அப்பாக்கு தெரியவே வரும். அப்போ கூட அவர் கண்டுக்க மாட்டார். பணம் கொடுத்து சரோகேட், ஐவிஎப் ன்னு இன்னோரு குழந்தை பெத்துப்பார் அவ்வளவு தான்!”

  

அக்ஷரா சொன்னதைக் கேட்டு ஆதித்யா அமைதியாக யோசித்தான்.

  

“உங்க வீட்டுல உன்னை திட்டுறாங்கன்னா பொறுப்புகள் இருக்குறதால தானே ஆதி சொல்றாங்க? உன் அக்கா எப்படி உனக்காக எல்லாத்தையும் எடுத்து செய்றாங்க, அவங்களுடையது எல்லாத்தையும் உனக்கு கொடுக்குறாங்க! அதெல்லாம் யாராவது சொல்லியா செஞ்சாங்க? அதே மாதிரி நீயும் இருப்பன்னு உன் அம்மா, அப்பா எதிர்பார்க்குறாங்க.”

  

“நிறுத்து அக்ஷரா! அவங்க டார்ச்சர் பத்தி உனக்கு தெரியாது. நான் வேலைக்கு போய் சம்பாதிச்சு அவங்க பொறுப்பை எல்லாம் எடுத்துக்கனும். என் பணத்தை வச்சு அவங்க, பார் என் மகன் எவ்வளவு சம்பாதிக்குறான்னு பீத்திக்கனும். எனக்கு என்ன பிடிக்கும் நான் என்ன ஆசைப்படுறேன்னு யோசிக்கவே மாட்டேங்குறாங்க. படிச்சு முடிச்சுட்ட வேலைக்கு போ, வேலைக்கு போன்னு ஒரே இம்சை.”

  

“அந்த படிப்பு உனக்கு பிடிக்கலையா?”

  

“பிடிக்காம எல்லாம் இல்லை. எனக்கு வேலைக்கு போறதை விட வேற விஷயங்கள்ள தான் ஆர்வம் இருக்கு.”

  

“நீ ஒரு ஜீனியஸ் ஆதி. அவங்களுக்கு அது புரியலை. அதுக்காக வங்களை குறை சொல்லாதே ப்ளீஸ். எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை படிக்க வச்சிருப்பாங்க? அவங்களுக்குன்னு சில எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்குறதை தப்புன்னு சொல்ல முடியுமா என்ன? நீ மெச்சூர்டா யோசி!

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.