"ஆமாம், ஆனால் அது நீ நினைக்கிற மாதிரி பெரிசா எதுவும் இல்லை... சரியா?"
சந்தோஷமாக தலையாட்டிய மதுமதி,
"ஆனால் மேடம், நீங்க இன்னைக்கு என்னை க்வெஸ்ட்டியனே கேட்கவே இல்லையே... நான் இன்னைக்கு நல்லா படிச்சுட்டு வந்திருந்தேன்..." என்றாள் கொஞ்சம் சிணுங்கலாக.
"தெரியும்! அதனால தான் கேட்கலை... நீ என்னைக்குப் படிச்சுட்டு வரலையோ அன்னைக்கு தான் கேட்பேன்..." என்றாள் பாரதி புன்சிரிப்போடு.
அதற்குள் ஸ்டாஃப் ரூம் வரவே, மதுமதி பாரதியிடம் விடைப் பெற்றுச் சென்றாள்.
திரும்பி தன் வகுப்பறை நோக்கி நடந்த மதுமதிக்கு கால்கள் தரையில் நிற்பதாகவே தோன்றவில்லை. அவளுக்கு பாரதியை மிகவும் பிடித்து இருந்தது!
விவேக் செய்த கலாட்டாவிற்கு எந்த கோபத்தை காட்டாமல், ஈசியாக பாரதி அவளிடம் பேசிய விதம் ரொம்பவும் பிடித்து இருந்தது!!!
************
அன்று இரவு உணவுக்கு மதுமதியை தவிர நரேந்திரன் குடும்பத்தினர் அனைவரும் உணவறையில் இருந்தனர். மற்ற நேரம் போல் இல்லாது இரவு உணவை மட்டும் குடும்பத்தினர் ஒன்றாக இருந்து உண்ண வேண்டும் என்பது நரேந்திரனின் விருப்பம். பொதுவாக யாரும் அதை மீறி நடப்பதில்லை.
"உமா, மது குட்டி எங்கே? ஆளையே காணும்?" என்று தன் மூத்த மருமகளை வினவினாள் நரேந்திரனின் மனைவி கற்பகம்.
நரேந்திரன் போல் அல்லாது கற்பகம் பணக்கார குடும்பத்தில் பிறந்து வந்தவள். தன்