(Reading time: 5 - 9 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"பரவாயில்லை சார்... நான் தேவை இல்லாத விஷயங்களை மனசிலோ, மெமரியிலோ வைத்துக் கொள்வதில்லை..."

  

"ஆனால் அது அவ்வளவு ஈசியா என்ன?"

  

"ஈசியா எதுவுமே நடக்காது சார்... நாம தான் அதற்கு ஏத்த மாதிரி நம்மளை தயார் செய்துக்கனும்..."

  

பதில் சொல்லாது புன்னகைத்தான் விவேக். அதன் பின் சில வினாடிகள் அமைதியில் கழிந்தது. விவேக் ஏதாவது பேசுவான் என்று காத்திருந்த பாரதி அவன் எதுவும் சொல்லாது அமைதியாக இருக்கவும்,

  

"எதோ பேசனும்னு சொன்னீங்களே... அது இந்த சாரி தானா சார்????" எனக் கேட்டாள்.

  

அவன் இல்லை என தலை அசைத்தான்.

  

"ஒ! வேற என்ன?"

  

ஆர்வத்துடன் ஒலித்த அந்த கேள்விக்கு பதில் சொல்ல அவள் புறம் திரும்பிய விவேக்,

  

"பாரதி... என்னை கல்யாணம் செஞ்சுப்பீங்களா?" என்றுக் கேட்டான். 

    

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

3 comments

  • 🌹 உன்னருகே நான் இருந்தால்...🌹<br /><br /> உங்கள் எழுத்தின் தீவிர ரசிகை நான்...<br /><br />கை கொள்ளா பக்கங்களோடு உங்கள் எழுத்துக்களால் எங்களை வசியம் பண்றீங்க...<br /><br />நான் படித்த நாவல்களில் யாரோட ஹீரோ உங்களுக்கு first பிடிக்கும்னு கேட்டால்... நான் பிந்து வினோத் ஹீரோன்னு சந்தோஷமா... சத்தமா... சொல்வேன்...<br /><br />நான் இந்த நாவலை எத்தனை முறை வாசித்தேன்னு எனக்கே தெரியாது...<br /><br />உறவுகளுக்குள் உள்ள அன்பை ரொம்ப அழகா சொல்வீங்க...<br /><br />அதை வாசிக்கும் போது என் குணங்களில் உள்ள பிழைகளை நானே சரிசெயதிருக்கிறேன்...<br /><br />உங்கள் பெயர் தாங்கிய புத்தகங்களை நூலகத்தில் பார்க்கும் போது இந்த சத்தம் தான் காதில் கேட்கும்...<br /><br /> 😉 அது பம்பாய் படத்தில் அரவிந்தசாமி... மனீஷா... meet பண்ணும்போது வருமே... அந்த இசை... 😍😍😉 எனக்காக கேட்கறீங்களா...?

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.