Page 4 of 4
"பரவாயில்லை சார்... நான் தேவை இல்லாத விஷயங்களை மனசிலோ, மெமரியிலோ வைத்துக் கொள்வதில்லை..."
"ஆனால் அது அவ்வளவு ஈசியா என்ன?"
"ஈசியா எதுவுமே நடக்காது சார்... நாம தான் அதற்கு ஏத்த மாதிரி நம்மளை தயார் செய்துக்கனும்..."
பதில் சொல்லாது புன்னகைத்தான் விவேக். அதன் பின் சில வினாடிகள் அமைதியில் கழிந்தது. விவேக் ஏதாவது பேசுவான் என்று காத்திருந்த பாரதி அவன் எதுவும் சொல்லாது அமைதியாக இருக்கவும்,
"எதோ பேசனும்னு சொன்னீங்களே... அது இந்த சாரி தானா சார்????" எனக் கேட்டாள்.
அவன் இல்லை என தலை அசைத்தான்.
"ஒ! வேற என்ன?"
ஆர்வத்துடன் ஒலித்த அந்த கேள்விக்கு பதில் சொல்ல அவள் புறம் திரும்பிய விவேக்,
"பாரதி... என்னை கல்யாணம் செஞ்சுப்பீங்களா?" என்றுக் கேட்டான்.
தொடரும்...