"இல்லை மாமி இந்த தீவே எங்களுடையதுதான்."
"அடி மானசி, நீ இத்தனை பெரிய ஆளா எங்களுக்கு சொல்லவே இல்லையே நான் இங்கு ஒன்ன பார்ப்பேன்னு நினைக்கல!"
அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“மாமி நீங்க எல்லாம் சுத்தி பாருங்க ஒரு பைசா கொடுக்க வேண்டாம் நான் உங்க கூட…." என்று கூறி அங்கிருந்த செக்யூரிட்டி இடம் ஒரு ஆளை அனுப்பச் சொல்லி அவர்கள் கூடவே அவனையும் போக சொன்னாள்.
"மாமி சுற்றிப்பார்த்துவிட்டு எங்க வீட்டுக்கு வரணும் கேட்டோ?"
"நான் கண்டிப்பாயிட்டு நிண்ட வீட்டுக்கு வரும்."
"சரி மாமி நீங்க நல்லாயிட்டு பார்த்துட்டு வாங்க."
"கண்டிப்பாடி மானசா, உன் வீட்டுக்கு வரேன்".
அவர்களை அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்து புதிதாக வருபவர்களுக்கு சாப்பாடு பிராமணர்கள் வீட்டில் செய்யுமாறு இருக்க வேண்டும் என்று தானே செய்தாள்.
எல்லோரும் வந்தார்கள் "வாங்க மாமி எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டேன் வந்து சாப்பிடுங்கோ!"
"இருடி குழந்தை கைகால் அலம்பிகிட்டு வந்துடறேன்." மாமி வந்தவுடன், "இந்த சமையல் எல்லாம் யார் செஞ்சா? " என்று கேட்கவும்..
மானசா சிரித்துக்கொண்டே" எல்லாம் நான் தான் செய்ஞ்சேன் கவலைப்படாமல் சாப்பிடுங்கோ!"