" அது சரி, எத்தனை பண்ணாலும் அம்மை, அச்சனை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டா."
என்று பேசிக் கொண்டே மாமி சாப்பிட்டு முடித்தார்.
மாமிக்கு வெற்றிலை பாக்கு தட்டில் புடவையும் வைத்து மாமியிடம் கொடுத்தாள் மானசா .
"சரிடி குழந்தை நான் கிளம்பிக்கறேன். "
"சரி மாமி," என்ற வாசல் வரை சென்று அவரை அனுப்பி வைத்தாள்.
மாமி சென்றவுடன் கண்கள் கலங்கியது மானசாவிற்குக்கு.
அப்போது மாதவன் நாயர் உள்ளே வந்தான்.
"என்ன ஆச்சு மானசி ஏன் கரையற, நிண்ட அச்சன நோக்கிட்டு வந்ஞோ?"
"அல்ல நாயரே, எண்ட அச்சத்னுக்கு ஹார்ட் அட்டாக் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்து இருக்காங்க!"
" விரைப்பாக இருந்தவன் , தன் நிலைக்கு வந்தான்." எந்த ஹாஸ்பிடல் மானசி? நாம உடனே கிளம்பி போலாம் வா."
" எங்க வீட்டுக்குகிட்டையே இருக்கும் ஹாஸ்பிடல்."
"கிளம்பு, நாம போய் பார்க்கலாம்.."
"நாயரே, ஒரே வேளை எண்ட அம்மை, அச்சன் ஏதாவது நம்மள சொல்லிட்டா?"
" நம்மள ஏசினா கூட நாம அவங்களுக்கு