அவள் அம்மாவிற்கும் வெட்கம் வந்தது. வேறு புறம் திரும்பி கொண்டார்.
"நான் இங்கேயே அம்மாவுடன் இருக்கட்டுமா?" என்று அவனிடம் கேட்க
அவனுக்கு அவளை தனியாக விட மனமில்லை.
"இல்லை மானசி, காலையில சீக்கிரம் கிளம்பி வந்து விடலாம். அம்மாவையும் நம்ம கூட கூட்டிட்டுபோலாம், திரும்பி வரும் போது நம்மோடைய வந்துடட்டும்."
" அப்போ அச்சனை யார் பார்த்துப்பா?" என்று மானசா கேட்டாள்.
"இங்க இருக்கிற நர்சு பாத்துப்பாங்க ஏற்கனவே ஏற்பாடு செய்ட்ஞ்சுட்டேன்."
"எப்படியும் அச்சனுக்கு மருந்துகள்னால தூங்கிட்டே இருப்பார், யார் இங்க இருந்தும் பிரயோஜனம் இல்லை நர்சு தான் பார்க்க போறாங்க"
"நீ என்ன சொல்ற அம்மே?"
"எனக்கு ஒன்னும் புரியல மானசா, நீ என்ன சொல்றியோ அப்படியே செய்யறேன்."
"சரி அப்ப எங்களோட வீட்டுக்கு வந்துடு."
"சரி ஆனா அப்பாக்கு ஒன்னும் ஆகாது இல்லை?”
"அச்சனுக்கு ஒன்னும் ஆகாது அம்மே, எங்களோட வந்துடுங்க காலையில கிளம்பி வந்துடலாம்." என்று மாதவன் கூறினான்
"சரி!" என்று கூறி மூவரும் கிளம்பி சென்றார்கள்.