தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 19 - யாஷ்
“என்ன அக்ஷரா ரொம்ப அமைதியா இருக்க?” ஆதித்யாவே அப்படி கேட்கும் வரைக்கும் அக்ஷரா பேசாமல் அவனை தொடர்ந்துக் கொண்டிருந்தாள். அவர்கள் காஷ்யாப், ஸ்ரீகர் தாண்டி வந்து சில நிமிடங்கள் ஆகி இருந்தது.
“உண்மையா சொல்லனும்னா இன்னும் ஷாக் ஸ்டேட்ல இருக்கேன்னு சொல்லனும், ஆதி!” அக்ஷரா இப்போது சிரித்துக் கொண்டே சொன்னாள். “நீ காஷ்யாப் கிட்ட ரூடா பேசினதை என்னால நம்பக் கூட முடியலை!”
“தெரியலை அக்ஷரா. திடீர்னு எப்படி அப்படி பேசினேன்னு தெரியலை. ஸ்நாப் ஆயிட்டேன்னு நினைக்கிறேன்.”
“அப்பப்போ ஸ்நாப் ஆகலாம் தப்பு கிடையாது. உன் எனிமி முஞ்சியை பார்த்திருக்கனும் நீ. மங்கீ மாதிரி இருந்தான்.”
“அவன் எனிமி கிடையாதுப்பா. எனக்கு எவ்வளவோ ஹெல்ப் செய்திருக்கான்.”
‘நீயும் ஈக்வலன்ட்டா அவனுக்கு செஞ்சாச்சு. சும்மா பாட்டு பாடாதே.”
“ஓகே. அது வேண்டாம். நாம சப்மிட் செய்திருக்க ப்ரோபோசல் பத்தி பேசலாம். எப்படி நீ இன்னைக்கு சுத்தமா டென்ஷனே இல்லாம இருக்க? எனக்கு தூக்கமே வரலை. ரிசல்ட் வர வரைக்கும் ஒன்னுமே ஓடாது.”
“ரிசல்ட் அனவுன்ஸ் செய்ததும் என்ன ஆகும் ஆதி?”
“நாம ப்ரொபோஸ் செய்த ப்ராஜக்ட் சம்மரியை எல்லோர் முன்னாடியும் ப்ரெசென்ட் செய்ய சொல்வாங்க. அப்புறம் கடைசியா யாரு ஜாக்ருதியை மீட் செய்யப் போற ஒரே லக்கி டீம்ன்னு சொல்வாங்க.”
“நீ என்ன நினைக்குற?”